செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

வெற்றிடம்....

வெற்றிடமாகவே இருக்கிறது
நீ விலகி போன பின் என் இதய அறை
உன் போலவே சிரித்தவரிடம்
உன் தெற்றுப் பல்லின் அழகில்லை 
உன் போலவே பேசியவரிடம்
உன் அறிவின் கூர்மை இல்லை 
உன்னைப் போலவே பழகியவரிடம்
உன் போல அன்பில்லை 
உன் உள்ளம் போல யாருக்கும் 
உள்ளம் வெள்ளையில்லை
நீ நேசித்ததை போல் யாருக்கும் 
என்னை நேசிக்க தெரியவில்லை 
எவ்வளவு பேர் கடந்தாலும் 
யாரும் நிரப்பவில்லை 
உன்னால் ஆன வெற்றிடத்தை ..........