ஞாயிறு, 31 மார்ச், 2013

நினைவுகளின் பாரம்

யாரிடமாவது பகிர வேண்டுமெனநினைக்கையில் நீ தான் முதலில் நினைவில் வருகிறாய் ...பயணிக்க வேண்டுமெனில் உன் துணையை தான் தேடுகிறேன் ...சந்தோஷ வேளைகளில் உன் சிரிப்பை எண்ணுகிறேன்...துயரம் சூழ்கையில் உன் ஆறுதலை தேடுகிறேன் ...எல்லாமும் நீதான் ஆனாலும்..?யாரையாவது மறக்க வேண்டுமெனில்உன்னைத்தான் மறக்க நினைக்கிறேன்உன் நினைவுகளின் பாரம் தாளாமல்.........