சுஜா கவிதைகள்
வெள்ளி, 30 ஜூலை, 2010
தவறுகள்
தவறுகள் எல்லாமே
தெரியாமல் செய்தவையாக
கருதபடுகின்றன
நமக்கு வேண்டியவர்கள்
செய்யும் போது மட்டும் ....
பார்வை
உயிர் கொல்லும் என்று
தெரிந்த பின்னும்
வேண்டுமென யாசிக்கிறேன்
உனது பார்வையை ....
நினைவு
உன்னை நினைக்க
எனக்குள் ஆயிரம் காரணங்கள்
என்னை மறக்க
உனக்குள் ஆயிரம் காரணங்கள் ...
அழியாத நினைவு சின்னங்கள்
என நீ கொடுத்த
பரிசு பொருட்கள் எல்லாம்
அழிந்தன காலப்போக்கில் ...
அழித்து விடு என நீ சொன்ன
உன் நினைவுகள் மட்டும்
அழியவில்லை இன்றுவரை ...
திங்கள், 5 ஜூலை, 2010
தொலைந்த சிறகுகள்
எனக்கு நினைவு தெரிந்த
நாள் முதலாய் தேடுகிறேன்
தொலைந்து போனதாய்
நான் நினைத்திருந்ததை
சகோதரன் துணையுடன்
கடைவீதிக்கு சென்றேன்
தந்தையின் கைப்பற்றி
தெருவில் நடந்தேன்
இன்று கணவனின் கண்காணிப்பில்
வலம் வருகின்றேன்
எனக்கென்ற சிறகுகள்
எங்கேயென தேடுகையில்
கிடைத்தது பதிலொன்று
தொப்புள் கொடியுடன்
பிய்த்தெறிந்து விட்டனர்
பெண்ணென்று தெரிந்ததால் ..........
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)