பாங்காங் ஏர்போர்டில் இறங்கி நேராக இமிக்ரேஷன் போனோம் அதற்கான பேப்பர்ஸ் தனித்தனியா ஃபைல் பண்ணி ஆளுக்கு 10000 பாத் கையில் வச்சுக்கிட்டு போய் நின்னால் ஒரு லேடி வந்து ஃபேமிலியானு கேட்டுட்டு ஒருத்தர் நின்னா போதும் னு சொல்லி என்னை வெளியே அனுப்பிட்டாங்க ... 2 நிமிடத்தில் மகளும் விசா எடுத்துட்டு வந்துட்டா...விசாவுக்கு இருவருக்கும் 4400 பாத் வாங்கினார்கள்...எந்த கேள்வியும் கேட்காமல் பேப்பர்சும் பார்க்காமல் உடனே விசா கொடுத்துட்டாங்க...(இதுக்கு மகன் ஆபிஸ் ரூமில் எடுத்து கொடுத்த ஜெராக்ஸ் சரியில்வைனு வெளியே வேற எடுத்துட்டு வர சொல்லி அடம் புடிச்சு கொண்டு வந்தேன்) பேக்கேஜ் எடுத்துட்டு உடனே வெளியே வந்துட்டோம்... ஏர்போர்ட் உள்ளேயே கண்ணாடி கதவுக்கு முன்பே வெளியே நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் டிரைவருக்காக ஒரு போர்டில் நம் பெயர் ஒட்டியிருக்கறார்கள் நாம் போய் நம் பெயரை சொன்னதும் டிரைவருக்கு இன் ஃபார்ம் பண்றாங்க... கார் நம்பர் சொன்னதும் நானும் மகளும் காரிடம் போனோம் சிரித்த முகத்துடன் வணக்கம் தெரிவித்து சூட்கேஸ் ஏற்றினார் டிரைவர்... 1 மணி நேரம் பயணத்திற்கு பின் காஃபி என்ற டிரைவரிடம் எஸ் என்றேன்... நிறுத்திய இடத்தில் வரிசையாக கடைகள்... 7 மணிக்கு எல்லா கடைகளிலும் கறியின் வாடை..புதுசுபுதுசா கறியில் என்னென்னவோ செய்து வைக்கிறார்கள்....வேடிக்கை பார்த்துக்கிட்டே Cafe Amazon ல் போய் 2 பேரும் காஃபி குடிச்சிட்டு திரும்ப வண்டி ஏறும் போது தான் கவனிச்சேன் டிரைவர் ஒரு லேடினு..சரினு பேச்சு கொடுத்தால் அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாதாம் .... இங்கு பெரும்பாலானோர் தாய் thai மொழி மட்டுமே தெரிந்திருக்கிறார்கள்... ஆங்கிலத்தில் பேசினால் புரிவதில்லை.. சைகை மொழி தான் உதவுகிறது... அங்கிருந்து நேராக நாங்கள் போன முதல் இடம் டைகர் பார்க் .... அங்கேயே பிரஷ்அப் பண்ணிட்டு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட அங்கேயே இன்டியன்ஃபுட் புக் பண்ணியிருந்தாங்க ...
சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் zoo வண்டியில் ஏறி உள்ளே உள்ளே போனோம்... இறங்கியதும் முதலில் முதலை பண்ணை அதன் பிறகு புலி கூண்டு என பார்த்து கொண்டே போனோம்... விரும்புபவர்கள் முதலைக்கு உணவு வாங்கி போடலாம்... புலிகளுடன் புகைப்படம் எடுக்கலாம் ... புலிகளின் வகைகேற்ப கட்டணம் வசூலிக்கிறார்கள்.... 10.30 மணிக்கு டைகர்ஷோ நடத்தினார்கள்... புலிகளை நன்றாக பழக்கி சர்க்கஸ் வித்தை காட்டுகிறார்கள்...ஆனால் இந்த புலிகளை பார்க்கும் போது ரொம்ப பாவமாக தான் இருந்தது... ஒவ்வொரு வித்தை முடிந்ததும் ஒரு துண்டு உணவு தருகிறார்கள் அதற்காக அவையும் பூனை போல விளையாடுதுங்க இதை பார்த்தால் எனக்கொரு பாடல்தான் நினைவுக்கு வருகிறது
வயத்துக்காக மனுஷன்(புலிகள்) இங்கே கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு......புலிகளுக்கு கூட இந்த நிலைமை தான் போல....தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக