செவ்வாய், 16 ஜூன், 2015

.
               ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை 
               சான்றோன் எனக்கேட்ட தாய் ....  

              என் மகன் ...மழலை பருவத்தில்  அவனது ஆச்சி விளையாட்டாய் சொன்ன பைலட் ஆகணும் என்கிற வார்த்தையை துரத்தி பிடித்தவன்....சிறுவயதில் யார் கேட்டாலும் நான் பைலட் ஆக போகிறேன் என்பதே அவனது  பதிலாக இருக்கும்...வளர் பருவத்தில் கூட அவனது சிந்தனையை சிதற விட்டதோ மாற்றியதோ  இல்லை ...அவனுகென்று ஆசை வைத்து கொள்ளாமல் வற்புறுத்தலுமின்றி  எங்கள் கனவுகளை தன கனவாக மாற்றி துரத்தியவன்  ....கண்ணுக்குள் வைத்து வளர்த்த மகன் பக்கத்து இடங்களுக்கு கூட தனியே அனுப்பியது இல்லை அப்படிப்பட்டவனை முதன் முறையாக பிரிந்து வெளிநாடு அனுப்பி வைத்து கலங்கி நின்ற எங்களை தேற்றி சென்றவன்....தடைகளை தாண்டி தனிமையில் தடுமாறாமல்  தனது படிப்பை  வெற்றிகரமாக முடித்து  கமர்ஷியல் பைலட் (commercial pilot )பட்டம் பெற்று திரும்பும் எனது மகனை மனதார வாழ்த்துங்கள் தோழர் தோழிகளே........ .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக