சனி, 18 ஜூலை, 2015

தோள் தாண்டி வளர்ந்தாலும் 
கடல் தாண்டி தனியே 
இருந்தவன் ஆனாலும் 
விளையாடி களைத்த குழந்தை 
தாய்மடி தேடி வருவதை போல் 
தேடி வருவதில் குழந்தை அவன்.....

என்னை பசித்திருக்க விடாதவன்  
பாதை கடக்கையில் 
கை பிடித்து கடப்பவன்
புகுந்த வீட்டினில் மகளின்
முகம் பார்த்து சூழலறியும்
தகப்பன் போல் என் 
முகம் பார்த்து மனமறிவதில்
என் தகப்பனவன்......... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக