வியாழன், 6 ஆகஸ்ட், 2015

பால்யம்  கடக்கவில்லையோ என 

கொஞ்ச வைக்கிறாள் குழந்தையாய் 

 கைப்பொதிந்து பின்பற்றி நடக்கையில் 

சிறுமியகிறாள் சில நேரங்களில்

 காளையினரின் கண் படுகையில்

 குமரியென எண்ணிட வைக்கிறாள் 

தோள் அணைத்து அந்தரங்கம் பகிர்வதில் 

 தோழியகிறாள் பல பொழுதுகளில் 

 நாகரீகம்  கற்று கொடுத்து பழக 

சொல்வதில் ஆசிரியை ஆகிறாள் 

குட்டு வைத்து தவறை திருத்துகையில்

 சகோதரியகிறாள் சில பொழுகளில்  

அன்பை பொழிந்து மடி சாய்த்து கொள்வதில்

 அன்னையும் ஆகிறாள் இந்த பட்டாம்பூச்சி 

என் வாழ்வில் வண்ணங்கள் சேர்க்க வந்த 

இந்த தேவதையின் பிறந்தநாள் இன்று........

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக