ஞாயிறு, 22 ஜனவரி, 2017

        வாழ்வில் எதற்காகவும் இதுவரை  கொடி பிடித்ததோ கோஷம் போட்டதோ இல்லை...போரட்டகளம் என்பதை  தொலைகாட்சியில் வேடிக்கை பார்த்து, நாட்டில் நடக்கும் அவலங்களையும் அராஜகங்களையும் விமர்சிப்பதோடு என்னால் என்ன செய்ய முடியும் என்கிற இயலாமையோடு கடந்து செல்லும் என்னையும் இந்த போராட்ட களத்தில் இறங்கி கோஷம் போட வைத்தது எதுவென்றால் ,..... இளைய சமுதாயமே  ...

       தாங்கள் இறங்கியதோடு மட்டுமில்லாமல் எங்களையும் கைப்பிடித்து அழைத்து வந்து உங்களாலும் முடியும் என்கிற நம்பிக்கையை எங்களுக்குள் விதைத்துள்ளனர்  இந்த மாணவ செல்வங்கள் .....இது வரை ஓட்டு போடுவது மட்டும் தான் எங்கள் கடமை என இருந்த எங்கள் மனதில் இதுவும் உங்கள் கடமை...நம் உரிமைகளை அறவழியில் போராடி பெற முடியும் என்கிற மிக பெரிய நம்பிக்கையை எங்கள் மனதில் ஊட்டிய நீங்கள் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாக்கள் ........

     முக்கியமாக சென்னை பிள்ளைகள் சமுதாய பொறுப்பற்றவர்கள் என்கிற அவபெயரை முழுவதும் துடைதெறிந்து எல்லோருக்கும் முன்னுதாரணமாய் நின்று எங்களை  தலைநிமிர்ந்து நிற்க வைத்து விட்டீர்கள் ....

      இனிவரும் காலங்களிலும் சமூக அவலங்களை எதிர்த்து  போராடும்   உங்களின் பின்னால் என்றும் நாங்கள்  துணை நிற்போம்  .....
     
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக