ஞாயிறு, 22 ஜூன், 2025

பயணங்களின் பதிவுகள் தாய்லாந்து 4

 





டைகர் ஷோ முடிந்ததும் திரும்ப அதே வண்டியில் கொண்டு வந்து பார்க்கிங் கில் விட்டுவிட்டார்கள்.... டிரைவர் ஹோட்டலில் கொண்டு வந்து டிராப் பண்ணினாங்க.. அது ஒரு இண்டியன் ரிசார்ட் அங்கே ரெஸ்ட் எடுத்துட்டு மதிய லன்ச் அங்கேயே முடிச்சுட்டு அடுத்து கிளம்பி போன இடம் பட்டாயா ஃபுளோட்டிங் மார்க்கெட்... கூட வந்த டிரைவர் டிக்கெட் கொடுத்துட்டு வாசலில் விட்டுவிட நாங்க ரெண்டு பேரும் உள்ளே போனோம்... படகின் இருபக்கமும் கடைகள் படகில் பயணிச்சுகிட்டே வேண்டியதை வாங்கலாம்... ஒரிஜினல் மார்க்கெட் பாங்காங் கில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும் அதன் நகலை இங்கு உருவாக்கி டூரிஸ்ட் ஸ்பாட் ஆக்கி விட்டதாகவும் சொல்கிறார்கள்... எங்களுக்கு இது புதிய விஷயமாக இருந்ததால் அதில் பயணித்தது மிக மகிழ்ச்சியான நேரமாக  இருந்தது....ஒரு சுற்று சுற்றி இறக்கி விட்டதும் நடைபாதையில் திரும்ப ஒரு ரவுண்டு கடைகளை சுற்றி வந்தோம்...ஆனால் எதுவும் வாங்கும் விலையில் இல்லை... வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு வரலாம்...ஏதாவது சாப்பிடலாம்னு  பார்த்தால் எங்கேப் பார்த்தாலும் முதலைகறி தான் பிரதானமா இருக்கு...சரி பிரட் டோஸ்ட் சாப்பிடலாம் னு போனால் முட்டை கூட வெள்ளை நிறத்தில் இல்லாமல் பிரவுன் கலரில் இருக்கிறது ... அதிலும் வாழைபழம் இல்லையெனில் மாம்பழம் சேர்த்து டோஸ்ட் போட்டு தருகிறார்கள் ரிஸ்கே வேண்டாமென்று ஆளுக்கொரு ஜூஸ் மட்டும் குடித்து விட்டு வெளியேறினோம்..... வெளியே வரும் வழியில் தாய்லாந்தின் பாரம்பரிய உடையணிந்து புகைப்படம் எடுத்து கொள்ள ஒரு இடம் வைத்திருக்கிறார்கள்... விருப்பமெனில் எடுத்துக் கொள்ளலாம்...பாரம்பரிய நடன நிகழ்ச்சி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது...நின்று ரசித்து பார்த்து விட்டு கிளம்பினோம்.....அங்கிருந்து அடுத்த நிகழ்ச்சியாக நாங்கள் சென்றது அல்காசர் ஷோ எனும் வண்ணமயமான  நிகழ்ச்சி ஒன்றுக்கு.... தொடரும்

பயணங்களின் பதிவுகள் (தாய்லாந்து 3)



 


பாங்காங் ஏர்போர்டில் இறங்கி நேராக இமிக்ரேஷன் போனோம் அதற்கான பேப்பர்ஸ் தனித்தனியா ஃபைல் பண்ணி ஆளுக்கு 10000 பாத் கையில் வச்சுக்கிட்டு போய் நின்னால் ஒரு லேடி வந்து ஃபேமிலியானு கேட்டுட்டு ஒருத்தர் நின்னா போதும் னு சொல்லி என்னை வெளியே  அனுப்பிட்டாங்க ... 2 நிமிடத்தில் மகளும் விசா எடுத்துட்டு வந்துட்டா...விசாவுக்கு இருவருக்கும் 4400 பாத் வாங்கினார்கள்...எந்த கேள்வியும் கேட்காமல் பேப்பர்சும் பார்க்காமல் உடனே விசா கொடுத்துட்டாங்க...(இதுக்கு மகன் ஆபிஸ் ரூமில் எடுத்து கொடுத்த ஜெராக்ஸ் சரியில்வைனு வெளியே வேற எடுத்துட்டு வர சொல்லி அடம் புடிச்சு கொண்டு வந்தேன்)  பேக்கேஜ் எடுத்துட்டு உடனே வெளியே வந்துட்டோம்... ஏர்போர்ட் உள்ளேயே கண்ணாடி கதவுக்கு முன்பே  வெளியே நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் டிரைவருக்காக ஒரு போர்டில் நம் பெயர் ஒட்டியிருக்கறார்கள் நாம் போய் நம் பெயரை சொன்னதும் டிரைவருக்கு இன் ஃபார்ம் பண்றாங்க... கார் நம்பர் சொன்னதும் நானும் மகளும் காரிடம் போனோம் சிரித்த முகத்துடன் வணக்கம் தெரிவித்து சூட்கேஸ் ஏற்றினார் டிரைவர்... 1 மணி நேரம் பயணத்திற்கு பின் காஃபி என்ற டிரைவரிடம் எஸ் என்றேன்... நிறுத்திய இடத்தில் வரிசையாக கடைகள்... 7 மணிக்கு எல்லா கடைகளிலும் கறியின் வாடை..புதுசுபுதுசா கறியில் என்னென்னவோ செய்து வைக்கிறார்கள்....வேடிக்கை பார்த்துக்கிட்டே  Cafe Amazon ல் போய் 2 பேரும் காஃபி குடிச்சிட்டு திரும்ப  வண்டி ஏறும் போது தான் கவனிச்சேன்  டிரைவர் ஒரு லேடினு..சரினு பேச்சு கொடுத்தால் அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாதாம்   .... இங்கு பெரும்பாலானோர் தாய்  thai மொழி மட்டுமே தெரிந்திருக்கிறார்கள்... ஆங்கிலத்தில் பேசினால் புரிவதில்லை.. சைகை மொழி தான் உதவுகிறது... அங்கிருந்து நேராக நாங்கள் போன முதல் இடம் டைகர் பார்க் .... அங்கேயே பிரஷ்அப் பண்ணிட்டு   பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட  அங்கேயே இன்டியன்ஃபுட்  புக் பண்ணியிருந்தாங்க ...

 சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும்  zoo வண்டியில் ஏறி உள்ளே உள்ளே போனோம்... இறங்கியதும் முதலில் முதலை பண்ணை அதன் பிறகு புலி கூண்டு என பார்த்து கொண்டே போனோம்... விரும்புபவர்கள்  முதலைக்கு உணவு வாங்கி போடலாம்... புலிகளுடன் புகைப்படம் எடுக்கலாம் ... புலிகளின் வகைகேற்ப கட்டணம் வசூலிக்கிறார்கள்.... 10.30 மணிக்கு டைகர்ஷோ நடத்தினார்கள்... புலிகளை நன்றாக பழக்கி சர்க்கஸ் வித்தை காட்டுகிறார்கள்...ஆனால் இந்த புலிகளை பார்க்கும் போது ரொம்ப பாவமாக தான் இருந்தது... ஒவ்வொரு வித்தை முடிந்ததும் ஒரு துண்டு உணவு தருகிறார்கள் அதற்காக அவையும் பூனை  போல விளையாடுதுங்க இதை பார்த்தால் எனக்கொரு பாடல்தான் நினைவுக்கு வருகிறது 

வயத்துக்காக மனுஷன்(புலிகள்) இங்கே கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு......புலிகளுக்கு கூட இந்த நிலைமை தான் போல....தொடரும்

திங்கள், 15 ஏப்ரல், 2024

பயணங்களின் பதிவுகள் (தாய்லாந்து 2)

 


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. என்பதகேற்ப பயணத்துக்கான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பித்தோம்...
முதலில் தாய்லாந்து பயணத்திற்கு தேவையான டிக்கெட்... விசா.. தாய்லாந்து பாத்(பணம்) மாற்றுவது என முதற்கட்டவேலைகள் தொடங்கினோம் ...டிக்கெட் ரெடி..அடுத்து விசா ஆன்லைனில் எடுப்பதை விட அங்கேயே போய் ஆன்அரைவல் விசா எடுப்பது தான் ஈஸி என்று சொன்னதால்அதை அங்கேயே எடுக்கலாம்னு முடிவெடுத்தாச்சு..டிராவல்ஸில் இருந்து பட்டாயா வில் 2 நாள் பாங்காங்கில் 2 நாள் என  ரூம் புக் பண்ணி வவுச்சர் அனுப்பியிருந்தார் ...பணத்தை தாய்பாத்தாக ஒரு ஆளுக்கு 10000 பாத் என 20000 பாத் மாற்றி எடுத்துக் கொண்டோம் விசா விற்கு காட்ட இது அவசியம் ... விசா பார்ம் ,வெள்ளை பேக்கிரவுண்டில் 4 ஃபோட்டோ , பாஸ்போர்ட் காப்பி.தங்குமிடங்களின் பதிவுகாப்பி என எல்லாம் விசாவிற்கு ரெடி பண்ணி ஃபைல் பண்ணி வைத்து கொண்டோம்..இதற்கு நடுவில் தாய்லாந்தா போறிங்க வேற ஊருக்கு போகலாம்ல என்று முகத்தை சுழித்து கேட்வர்களிடம் ஹி ஹி என மழுப்பினாலும் அய்யய்யோ என்ன இப்படி சொல்றாங்கனு கொஞ்சம் குழப்பமாவும் ஆயிடுச்சு..அவ்வளவு கெட்ட பேர் எடுத்து வச்சிருக்கு அந்த ஊர் 🤣.பையனும் மருமருகளும் தாய்லாந்து க்கு நாங்க கியாரண்டினு சொன்ன பிறகு தான் தெளிவாச்சு..அப்புறம் தான் முக்கியமான விஷயம் ஷாப்பிங் 😝மகளும் மருமகளும் பார்த்து பார்த்து எடுத்து தந்த புது டிரஸை எல்லாம் சூட்கேஸ்ல போட்டு பேக் பண்ணி மகளும் நானும் முதன்முறையா குடும்பத்தை விட்டு தனியா கிளம்பியாச்சு....மகன் மருமகள் பேத்தி ஏர்போர்ட் வந்தாங்க கணவர் வீட்டு வாசலில் இருந்து வழியனுப்பும் போதே கண்ணெல்லாம் கலங்கிட்டார் போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே னு பாடாத குறைதான்😜...)ஏர்போர்ட் இப்போ மிக பெரியதா இருந்தாலும் ரொம்ப காலியா இருக்க மாதிரி ஃபீலாகுது... ஏர்போர்ட் பார்மாலிட்டிஸ் எல்லாம் ஸ்மூத்தா முடிஞ்சு மூன்றரை மணிநேர பயணத்தில் பாங்காங்  Don Muang airport ல் போய் இறங்கினோம்..... தொடரும்

#Thailand #Motherdaughter #Travelstories

புதன், 26 ஜூலை, 2023

பயணங்களின் பதிவுகள் (தாய்லாந்து 1)

 



Life is unpredictable
இந்த வரிகள் எவ்வளவு உண்மையானது என்பதை உணர்த்திய பயணம்✈
20 நாட்களுக்கு முன் இப்படி ஒரு விஷயம் நடக்கும் னு சொன்னால் நம்பியிருக்க வே மாட்டேன்...
என் வாழ்க்கை முதலில் அப்பா பிறகு கணவர் இப்பொழுது மகன் இப்படி ஆண்களை சார்ந்ததாகவே இருந்தது அதுவும் கணவரின் ஆளுமை மிக அதிகம் திருமணமாகி 32 வருமாகிறது இதுவரை ஒருநாள் கூட அவரில்லாமல் தனியே நான் போனதே கிடையாது அம்மா வீட்டிற்கு கூட சேர்ந்தே போவோம்... கடைக்கு போனால் கூட 10 போன் போடுவார் எங்கே போனாலும் சாயங்காலத்துக்குள் வீட்டுக்குள் வந்து டனும் இப்படி எல்லாம் இருந்தவர் இப்ப கொஞ்ச வருஷமா தான் ஷாப்பிங் போனால் அதிகம் போன் செய்வது கிடையாது 9 மணியானாலும் ஒண்ணும் சொல்வதில்லை... இப்படி இருந்தவர் திடீரென்று நீயும் மகளும் எங்கேயாவது வெளிநாடு போய்ட்டு வாங்களேன் என்றதும் சிரிச்சுட்டேன்... என்னை கிண்டல் பண்றார்னு அவர் நிஜமாவே சீரியசா சொன்னார்..மகனும் மருமகளும் ஏற்கனவே போய் வந்த இடம்  தாய்லாந்து..அதனால பையனும் ஏதாவது தாய்லாந்து  பேக்கேஜ் பாருமானு  சொன்னதும் இது கனவா நிஜமானு புரியாமல் ஷாக் ஆயிட்டேன்.... அனுப்பறாங்களோ இல்லையோ சும்மாவாச்சும் பார்க்கலாம்னு பார்த்தால் பெரிய டிராவல்ஸ் எல்லாம் கம்மியா ஆஃபர் போட்டிருந்தாலும் இடமும் ரொம்ப கம்மியா தான் போட்டிருந்தாங்க...... சரி வேற யாரையாவது பார்க்கலாம்னு  Facebook  ல 2 வருஷமா நான் ஃபாலோ பண்ற பேஜ் ல ஃபோன் பண்ணி பேசினேன் அவர் பேச்சில் நம்பிக்கை வரவே அவரிடம் நான் பார்க்க வேண்டிய இடங்களை லிஸ்ட் பண்ணி அனுப்பி வைத்ததும் அவர் பயணதிட்டமும் கட்டணமும் அனுப்பினார் கணவரிடம் காட்டியதும் உனக்கு ஓக்கேனா புரொசீட் பண்ணு ஆனா ஒரே ஒரு விஷயம் இந்த பயணத்தில் வர்ற எல்லா நல்ல கெட்ட விஷயங்களுக்கும் நீதான் பொறுப்பு னு குண்டை தூக்கி போட்டுட்டார்... சரிஓக்கே முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம் னு நினைச்சு பயண திட்டத்தை தொடங்கினோம்... தொடரும்

வியாழன், 6 ஜனவரி, 2022

பயணங்களின் பதிவுகள் ஏற்காடு 2022 (1)

  

     வருடம் தவறாமல் வரும் திருவிழா மாதிரி வருடம் தவறாமல் ஒரு டூர் போறது என்னுடைய பழக்கம்... ரெண்டு வருஷமா போக முடியாத சூழ்நிலை...ஆனால் இந்த






புத்தாண்டின்  முதல் நாளே நான் போன இடம் இந்த 2வருஷத்துக்கான சந்தோஷத்தையும் சேர்த்து  தரும்னு நினைச்சு கூட பார்க்கலை..... ஏற்காடு ஏற்கனவே 2010 ல் ஒருமுறை போய்ட்டு வந்த இடம் தான்...நார்மலா எப்பவும் போற டூர் மாதிரி தான் இருந்தது....அப்போ போனது மே மாதம்  க்ளைமேட் சில்லுனு இருந்தாலும் இந்த டிசம்பர் க்ளைமேட் தந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியாது... சினிமாவில் வர்ற மாதிரி பனிபடர்ந்த இடங்களும் அமைதியான சூழலும் வார்த்தையில் வர்ணிக்க முடியாது... அதுவும் 1ம் தேதி வருஷபிறப்பு அதுவுமா  அண்ணாமலையார் கோயிலில் சிவன் தரிசனமும் அதை சுற்றி பனி சூழ்ந்த மலையும் அவ்வளவு அழகாக மனதை கொள்ளை கொண்ட இடமாக இருந்தது...வாழ்க்கையில் மறக்கவே முடியாத புத்தாண்டாக அமைந்தது இந்த பயணம்......

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தோழி

ஊர் சுமையெல்லாம்
சேர்த்து சுமக்கிறாயே
என்று கடிந்து கொண்டே வந்தவள்
தானும் ஒரு சுமையை
தூக்கி வைக்கிறாள்
வீட்டில் சேர்ந்துவிட சொல்லி...
சூதனமாய் பிழைத்து கொள்
எனசொல்லி நகர்ந்தவளை
எந்த விதத்தில் சேர்ப்பதென
வழி மயங்கி நிற்க்கிறேன்......

புதன், 18 மார்ச், 2020

உலகை உலுக்கும் கொரோனா வைரஸும் அதை தடுக்க சில வழிகளும்

அனைவருக்கும் வணக்கம்.வணக்கம் என்கிற நல்ல பழக்கம் நம் இந்தியர்களின் பாரம்பரிய சொத்து .அதை உலகம் எங்கும் எல்லோரையும் ஏற்று கொள்ள வைத்திருக்கிறது இந்த கொரோனா .அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதற்கொண்டு அனைவரும் இப்பொழுது இந்த நல்ல பழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றனர் ...யாரிடமும் கைகுலுக்காமல் அனைவருக்கும் வணக்கம் என்று சொல்வது இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முதல் வழி ..
கைகளின் மூலமே பெரும்பாலான வைரஸ் பரவுகிறது அதனால் கைகளை சுத்தமாக வைத்திருப்போம்..அடிக்கடி கைகளை கழுவி கொண்டு இருப்பதும் சானிடைசர் கொண்டு சுத்த படுத்துவதும் முடிந்த அளவு கைகளுக்கு உறை மாட்டி கொள்வதும் பொது இடங்களுக்கு செல்லும் போது கைகளால் அல்லாமல் முழங்கையின் துணையுடன் கதவை திறப்பதோ அல்லது மூடுவதோ போன்ற செய்லகளை செய்வதும் இதை தடுக்க முதல் வழி ...மூச்சு காற்றில் பரவாதவாறு முகத்தை மூடும்படி முகமூடி அணிந்து கொள்வது மிக பெரிய பயன் தரும் .பொது இடங்களுக்கு செல்லாமல் முடிந்த அளவு வீட்டின் உள்ளேயே இருக்க பாருங்கள் ...அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் ...உணவு வழக்கத்தை பொறுத்த அளவில் சிக்கனில் வருகிறது மட்டனில் வருகிறது என வரும் வதந்திகளை நம்பாமல் அரசு சொல்லும் செய்திகளை மட்டும் நம்புங்கள் சிக்கன் மட்டன் மீன் போன்ற உணவுகளை நன்கு வேக வைத்து பின் சாப்பிடவும் ...உணவில் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள் .மிளகு சீரகம் போன்ற அஞ்சறைப்பெட்டி மருந்துகளையும் அடிக்கடி உண்ணுங்கள் .இது கொரோனவை அழிக்கும் என்பதற்காக இல்லை பொதுவாகவே நம் பாட்டிகள் வைத்தியம் எந்த நோயும் இன்றி வாழ சொல்லி கொடுத்த நம் அடுப்பங்கரை முதலுதவி பொருட்கள் இவை தான் ..நம் உணவு தான் நமக்கு மிக பெரிய மருந்து .முடிந்த அளவு நாம் நம் முயறிச்சியில் வைரஸ் பரவாமல் தடுப்போம்..அதையும் தாண்டி சளி இருமல் காய்ச்சல் என ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செண்டு ஒரு பரிசோதனை செய்து கொள்வது அனைவருக்கும் நலம் தரும் ..குழந்தைகள் விடுமுறை விட்டதும் வெளியில் செல்ல விரும்புவது இயல்பு தான் அவர்கள் கவனத்தி திசை திருப்பி அவர்களுடன் பேசி பழகி விளையாடி கவனத்த்தை ஈர்த்து வெளியில் செல்ல விடாமல் தடுப்பது பெற்றோரின் கடமை..வயதானவர்களும் கோவில் குளம் என்று சுற்றாமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்துங்கள் .. குழந்தை என்றும் வயதானவர்கள் என்றும் பணக்காரன் என்றும் ஏழை என்றும் நோய்க்கு தெரியாது ..எனக்கு வராது என்று யாரும் அலட்சியத்துடன் இருக்காமல் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நோயில் இருந்து நம்மை கொள்ளலாம் .எச்சரிக்கையுடன் இருப்போம் வைரஸை வெல்லுவோம் ..