வெள்ளி, 16 நவம்பர், 2018

பயணங்களின் பதிவுகள்  ( புனே& மும்பை 2018)2

     எல்லா கலாச்சார மக்களையும் ஒன்றாக கொண்ட சென்னையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால் தனிப்பட்ட ஒரு சமூக மக்கள் வாழும் புனே போன்ற ஒரு சிறு  நகரத்தின்  வாழ்வு முறை சற்று வித்தியாசமாகவே தெரிகிறது....வேற்று மொழி பேசுபவர்களை இரண்டாம்பட்சமாக பார்க்கும் மனப்பான்மை இருக்கிறது அவர்களிடம்....பாராட்டப்படவேண்டிய முதன்மையான  விஷயம் மரங்கள்....நாம் சாலையின் நடுவில் செடி வளர்ப்பதை போலில்லாமல் மரங்களை வளர்க்கிறார்கள்....வேறு இடங்களில் இருந்தும் மரங்களை வேரோடு பெயர்த்து சாலையின் நடுவில் நடுகிறார்கள்...இதனால் நிழலும் குளிர்ச்சியும் சேர்ந்து பயணங்களை மிக இனிதாக்குகிறது ....பேருந்து   பயணம் செய்பவர்களுக்காக பாதையின் நடுவில் தனியாக ஒரு இடம் ஒதுக்கி அதில் இருக்கைகள் மின்விசிறி என ஏற்பாடு செய்து உள்ளனர் ...பயணிகள் நெரிசலில் அவதியுறாமல் எந்த சிரமமும் இன்றி பயணிக்கின்றனர்........ சாலைகளில்  முக்கியமானது  புனேவில் இருந்து மும்பை போகும் பாதை....மரங்களும்  மலைகளும், மலைகளை குடைந்து போடப்பட்ட நீளமான சுரங்கப்பாதைகளும்  என அழகிய பயணப்பாதையாக இருக்கிறது மும்பை புனே எக்ஸ்பிரஸ் வே .....இந்தியாவில் பயணிக்க வேண்டிய அழகான பாதைகளில் இதுவும் ஒன்று.... பாந்த்ரா வோர்லி  ஸீ லிங்க் பிரிட்ஜ் கடலின் நடுவில் கட்டப்பட்டு இருக்கும் இந்த பாலம் மும்பையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டப்பட்டுள்ள அழகிய கடல் பாதை ....இதில் பயணித்தது அருமையான அனுபவம்.....மும்பை நான்  பல வருடங்களாக பார்க்க நினைத்த நகரம்.....கமலின் நாயகன் படம் பார்த்த நாளில் இருந்தே மும்பை பார்க்க வேண்டும் என நினைத்திருந்தது இப்போது தான் நிறைவேறியது.....மும்பை (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக