வெள்ளி, 16 நவம்பர், 2018

.பயணங்களின் பதிவுகள்






(ஊட்டி )..2018
ஊட்டி ......இரண்டு வருடத்திற்கு முன் மே மாதத்தில் சென்றிருந்த போது ஊட்டியின் நிலையை கண்டு மிக நொந்து போனேன்...எங்கு பார்த்தாலும் குப்பை,, பிளாஸ்டிக் கவர் ....சென்னை போல வெயில் ....இதனால் ஊட்டி போகும் ஆசை இல்லை என்றாலும் கேரளா பக்கம் போக முடியாததால் மீண்டும் ஊட்டி...ஆனால் இம்முறை [போனது அப்படி ஒரு ஏகாந்தமான அனுபவம் .....
ஊட்டி போக விரும்புபவர்கள் ஆகஸ்ட் இல்லை செப்டம்பர் மாதத்தில் போய் வாருங்கள் ....ஜனசந்தடி இல்லாத இடத்தில மெல்லிய சாரல்மழையில், மேகங்கள் நம்மை சூழ்ந்திருக்க நடுவில் சில்லென்ற குளிரில் புல்தரையில் நடப்பது வானத்தில் மிதப்பதை
போன்ற இனிமையான இன்பநிலை ....நான்கு முறை போயிருந்தும் இது வரை இப்படி ஒரு அழகான ஊட்டியை பார்க்கவில்லை .... அவ்வளவு சுத்தமாக அழகாக , பிளாஸ்டிக் பெரும்பான்மையாக ஒழிக்கப்பட்டு அழகாய் மேகம் போர்த்தி நின்றிருந்த மலைகளின் அரசியை பிரிந்து வர மனமே இல்லாமல் பிரிந்து வந்தோம் . .......தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக