வியாழன், 6 ஜனவரி, 2022

பயணங்களின் பதிவுகள் ஏற்காடு 2022 (1)

  

     வருடம் தவறாமல் வரும் திருவிழா மாதிரி வருடம் தவறாமல் ஒரு டூர் போறது என்னுடைய பழக்கம்... ரெண்டு வருஷமா போக முடியாத சூழ்நிலை...ஆனால் இந்த






புத்தாண்டின்  முதல் நாளே நான் போன இடம் இந்த 2வருஷத்துக்கான சந்தோஷத்தையும் சேர்த்து  தரும்னு நினைச்சு கூட பார்க்கலை..... ஏற்காடு ஏற்கனவே 2010 ல் ஒருமுறை போய்ட்டு வந்த இடம் தான்...நார்மலா எப்பவும் போற டூர் மாதிரி தான் இருந்தது....அப்போ போனது மே மாதம்  க்ளைமேட் சில்லுனு இருந்தாலும் இந்த டிசம்பர் க்ளைமேட் தந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியாது... சினிமாவில் வர்ற மாதிரி பனிபடர்ந்த இடங்களும் அமைதியான சூழலும் வார்த்தையில் வர்ணிக்க முடியாது... அதுவும் 1ம் தேதி வருஷபிறப்பு அதுவுமா  அண்ணாமலையார் கோயிலில் சிவன் தரிசனமும் அதை சுற்றி பனி சூழ்ந்த மலையும் அவ்வளவு அழகாக மனதை கொள்ளை கொண்ட இடமாக இருந்தது...வாழ்க்கையில் மறக்கவே முடியாத புத்தாண்டாக அமைந்தது இந்த பயணம்......

3 கருத்துகள்: