
இறந்து போன அம்மாவின்
நகைகள் எல்லாம்
அண்ணியின் கழுத்தை அலங்கரித்தன ....
புடவைகள் எல்லாம் அண்ணியின்
பீரோவில் அழகாய் அடுக்கப்பட்டன ....
அம்மாவின் சொத்து பத்திரங்கள்
அண்ணாவின் பெட்டியில் பதுங்கின ...
பாட்டியின் கட்டிலையும் பீரோவையும்
ஆளுக்கொன்றாய் பகிர்ந்து கொண்டனர்
அண்ணனின் பிள்ளைகள் ......
அம்மாவின் புகைப்படமொன்று
தரப்பட்டது என்னிடம்
இறந்தவர்களின் புகைப்படம்
வீட்டில் மாட்ட கூடாதென்ற விளக்கத்துடன் .......