வியாழன், 6 ஜனவரி, 2022

பயணங்களின் பதிவுகள் ஏற்காடு 2022 (1)

  

     வருடம் தவறாமல் வரும் திருவிழா மாதிரி வருடம் தவறாமல் ஒரு டூர் போறது என்னுடைய பழக்கம்... ரெண்டு வருஷமா போக முடியாத சூழ்நிலை...ஆனால் இந்த






புத்தாண்டின்  முதல் நாளே நான் போன இடம் இந்த 2வருஷத்துக்கான சந்தோஷத்தையும் சேர்த்து  தரும்னு நினைச்சு கூட பார்க்கலை..... ஏற்காடு ஏற்கனவே 2010 ல் ஒருமுறை போய்ட்டு வந்த இடம் தான்...நார்மலா எப்பவும் போற டூர் மாதிரி தான் இருந்தது....அப்போ போனது மே மாதம்  க்ளைமேட் சில்லுனு இருந்தாலும் இந்த டிசம்பர் க்ளைமேட் தந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியாது... சினிமாவில் வர்ற மாதிரி பனிபடர்ந்த இடங்களும் அமைதியான சூழலும் வார்த்தையில் வர்ணிக்க முடியாது... அதுவும் 1ம் தேதி வருஷபிறப்பு அதுவுமா  அண்ணாமலையார் கோயிலில் சிவன் தரிசனமும் அதை சுற்றி பனி சூழ்ந்த மலையும் அவ்வளவு அழகாக மனதை கொள்ளை கொண்ட இடமாக இருந்தது...வாழ்க்கையில் மறக்கவே முடியாத புத்தாண்டாக அமைந்தது இந்த பயணம்......

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தோழி

ஊர் சுமையெல்லாம்
சேர்த்து சுமக்கிறாயே
என்று கடிந்து கொண்டே வந்தவள்
தானும் ஒரு சுமையை
தூக்கி வைக்கிறாள்
வீட்டில் சேர்ந்துவிட சொல்லி...
சூதனமாய் பிழைத்து கொள்
எனசொல்லி நகர்ந்தவளை
எந்த விதத்தில் சேர்ப்பதென
வழி மயங்கி நிற்க்கிறேன்......

புதன், 18 மார்ச், 2020

உலகை உலுக்கும் கொரோனா வைரஸும் அதை தடுக்க சில வழிகளும்

அனைவருக்கும் வணக்கம்.வணக்கம் என்கிற நல்ல பழக்கம் நம் இந்தியர்களின் பாரம்பரிய சொத்து .அதை உலகம் எங்கும் எல்லோரையும் ஏற்று கொள்ள வைத்திருக்கிறது இந்த கொரோனா .அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதற்கொண்டு அனைவரும் இப்பொழுது இந்த நல்ல பழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றனர் ...யாரிடமும் கைகுலுக்காமல் அனைவருக்கும் வணக்கம் என்று சொல்வது இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முதல் வழி ..
கைகளின் மூலமே பெரும்பாலான வைரஸ் பரவுகிறது அதனால் கைகளை சுத்தமாக வைத்திருப்போம்..அடிக்கடி கைகளை கழுவி கொண்டு இருப்பதும் சானிடைசர் கொண்டு சுத்த படுத்துவதும் முடிந்த அளவு கைகளுக்கு உறை மாட்டி கொள்வதும் பொது இடங்களுக்கு செல்லும் போது கைகளால் அல்லாமல் முழங்கையின் துணையுடன் கதவை திறப்பதோ அல்லது மூடுவதோ போன்ற செய்லகளை செய்வதும் இதை தடுக்க முதல் வழி ...மூச்சு காற்றில் பரவாதவாறு முகத்தை மூடும்படி முகமூடி அணிந்து கொள்வது மிக பெரிய பயன் தரும் .பொது இடங்களுக்கு செல்லாமல் முடிந்த அளவு வீட்டின் உள்ளேயே இருக்க பாருங்கள் ...அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் ...உணவு வழக்கத்தை பொறுத்த அளவில் சிக்கனில் வருகிறது மட்டனில் வருகிறது என வரும் வதந்திகளை நம்பாமல் அரசு சொல்லும் செய்திகளை மட்டும் நம்புங்கள் சிக்கன் மட்டன் மீன் போன்ற உணவுகளை நன்கு வேக வைத்து பின் சாப்பிடவும் ...உணவில் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள் .மிளகு சீரகம் போன்ற அஞ்சறைப்பெட்டி மருந்துகளையும் அடிக்கடி உண்ணுங்கள் .இது கொரோனவை அழிக்கும் என்பதற்காக இல்லை பொதுவாகவே நம் பாட்டிகள் வைத்தியம் எந்த நோயும் இன்றி வாழ சொல்லி கொடுத்த நம் அடுப்பங்கரை முதலுதவி பொருட்கள் இவை தான் ..நம் உணவு தான் நமக்கு மிக பெரிய மருந்து .முடிந்த அளவு நாம் நம் முயறிச்சியில் வைரஸ் பரவாமல் தடுப்போம்..அதையும் தாண்டி சளி இருமல் காய்ச்சல் என ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செண்டு ஒரு பரிசோதனை செய்து கொள்வது அனைவருக்கும் நலம் தரும் ..குழந்தைகள் விடுமுறை விட்டதும் வெளியில் செல்ல விரும்புவது இயல்பு தான் அவர்கள் கவனத்தி திசை திருப்பி அவர்களுடன் பேசி பழகி விளையாடி கவனத்த்தை ஈர்த்து வெளியில் செல்ல விடாமல் தடுப்பது பெற்றோரின் கடமை..வயதானவர்களும் கோவில் குளம் என்று சுற்றாமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்துங்கள் .. குழந்தை என்றும் வயதானவர்கள் என்றும் பணக்காரன் என்றும் ஏழை என்றும் நோய்க்கு தெரியாது ..எனக்கு வராது என்று யாரும் அலட்சியத்துடன் இருக்காமல் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நோயில் இருந்து நம்மை கொள்ளலாம் .எச்சரிக்கையுடன் இருப்போம் வைரஸை வெல்லுவோம் ..

சனி, 7 மார்ச், 2020

தேவதை ஒன்று பூமியில் பிறந்தது 
வண்ணங்கள் பல கொண்ட
 அழகிய சிறகோடு 
தந்தையென்றும்  தமயனென்றும் 
மாமனென்றும் 
காவல் காப்பதாய்  எண்ணி  
சிறகினை பிடித்து கொண்டதில் 
பறப்பென்பதே தெரியாதது அத்தேவதைக்கு 
மணமுடித்து கொடுத்த இடத்திலும் 
சிறகுகள் கைமாறி சென்றது 
குடும்பமென்றும் பிள்ளைகள் என்றுமானதில் 
சிறகுகள் மறந்தே போனதே அத்தேவதைக்கு 
இறுதியாய் தானொரு தேவதையென 
உணராமலே இவ்வுலகை  விட்டு போனது 
அந்த அழகிய தேவதை ....
   

தேவதைகளின் சிறகினை முறிக்காமல் வலிமையோடு பறக்க வைப்போம் இனிவரும் காலங்களில் ...அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ..






புதன், 4 மார்ச், 2020

மொறு மொறு முறுக்கு சுட சுட தயார்

ஒரு பண்டிகை வந்தா தான் பலகாரம் செய்யணுமா என்ன?...எப்போ எல்லாம் சாப்பிடணுமுன்னு தோணுதோ அப்பவே பலகாரம் பண்ணிடனும்...முறுக்கு செய்யறது மிக பெரிய வேலையா நினைச்சு தீபாவளி வந்தா தான் செய்வேன் முன்னே எல்லாம் ஆனா இப்போ அப்படி இல்லை நினைச்ச உடனே ஈஸியா செய்து சாப்பிடறேன் அது எப்படினு உங்களுக்கும் சொல்லி தரட்டுமா இப்போ ....
தேவையான பொருட்கள்

1 கிலோ பச்சரிசி
1/4 கிலோ உளுந்து
வெள்ளை எள்ளு 2ஸ்பூன்
வேர்க்கடலை 1/2 கிளாஸ்
உடைத்த கடலை 1/2 கிளாஸ்
வெண்ணை 1 கரண்டி
பெருங்காயம் 1 ஸ்பூன்
சீரகம் 2 ஸ்பூன்

செய்முறை

பச்சரிசியை கழுவி ஈரப்பதம் போக ஒரு வெள்ளை துணியில் போட்டு பேன் காதுல காய வச்சிடுங்க கையில பிடிச்சு பாத காய்ந்த மாதிரி இருக்கனும் அந்த மாதிரி வந்ததும் எடுத்து பாத்திரத்துல போட்டுக்குங்க ....உளுந்தை வாணலியில் போட்டு பொன்னிறமா ஆகிற மாதிரி வருது எடுத்துக்கோங்க...அதுல சீரகம் பெருங்காயம் வேர்க்கடலை உடைச்ச கடலை எல்லாத்தையும் வருது அது கூட போட்டு மிசின் ல கொடுத்து அரைச்சு எடுத்துக்கோங்க ...அரைச்சிட்டு வந்த அரிசி உளுந்து எல்லாத்தையும் ஒண்ணா கலந்து எடுத்துக்கிட்டு சலிச்சிக்கோங்க ...
அதுல தேவையான அளவு உப்பு வெண்ணை மிளகாய் தூள் வெள்ளை எள்ளு போட்டு பிசைந்துக்கோங்க...ரொம்ப தண்ணிய விடாம கைக்கு நல்லா மெது மெத்துன்னு வர மாதிரி வந்ததும் ஒரு வெள்ளை துணியை போட்டி மூடி வச்சிடுங்க...
முறுக்கு குழாயை எடுத்து அதுக்கு உள்ளார எண்ணைய் கொஞ்சம் போட்டு நல்லா தடவி விடுங்க...இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமா எடுத்து அதுக்கு உள்ள போட்டு நல்லா மூடிட்டு ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதுல எண்ணைய் தடவி முள்ளு முறுக்கு தட்டு போட்டு நல்ல பிழிஞ்சு விடுங்க....அடுப்பை பத்த வச்சு எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைங்க...எண்ணைய் காய்ந்ததும் இந்த முறுக்கை ஒன்னு ஒண்ணாக எடுத்து அதுல போட்டு நல்ல சிவந்ததும் எடுத்து தட்டுல போட்டு ஆற வச்சிடுங்க...முறுக்கை சுட சுட சாப்பிட கொஞ்சம் மெத்துன்னு இருக்கும் நல்லா ஆற வச்சு சாப்பிடுங்க அப்போ தான் மொறு மொறுனு இருக்கும் ....


இந்தியாவின் ஆடம்பர ஹோட்டலும் பாரம்பரிய நுழைவுவாயிலும் கொண்ட மும்பை

மும்பை ...நாம எந்த வெளிநாடு போனாலும் இந்தியாவில் இருந்து வரும்னு சொன்னதும் அவங்க முதலில் நம்மை கேட்கும் கேள்வி மும்பையில் இருந்தா என்று தான் ...அந்த அளவுக்கு இந்தியா னு சொன்னதுமே நம் தலைநகர் டெல்லியை விட எல்லோருக்கும் தெரிந்த இடம் மும்பை தான் ..அப்படிப்பட்ட மும்பையை பார்க்காம இருக்கலாமா?....அதான் கிளம்பிடேன் மும்பையை பார்க்கா ...
மும்பையின் நுழைவு சிறப்பே கடலுக்கு நடுவில கட்டி இருக்கிற அந்த பாலம் தான் ..அதோட பேர் .பாந்த்ரா வோர்லி ஸீலின்க் ...கடலுக்கு நடுவில வண்டியில போகும் போது ரெண்டு பாகமும் கடல் அலைகள் வாவ் செம அழகு ....
அடுத்து நாங்க பார்க்க போனது இந்தியாவின் நுழைவு வாயில் ....பெருமை வாய்ந்த இந்த இடம் நம் நாட்டின் வரலாற்று பொக்கிஷம்..முன்பெல்லாம் உள்ளே பார்க்க அனுமதி அளித்து இருந்தார்கள் இப்பொழுது உள்ளே செல்ல முடியாது .. நாயகன் கோபுர வாசலிலே இதை மாதிரி படம் பார்த்தவங்களுக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும் ..கமல் சரண்யா நடந்து வரும் போது புறா நடந்து வர அந்த சீன் ரொம்ப பேமஸ் ...இப்போ வெளியே இருந்தே பார்க்க வேண்டியது தான்...
அடுத்து பார்த்தது தாஜ் ஹோட்டல்.. பார்த்தது என்றால் வெளியே இருந்து பார்த்தது ...இந்திய வரும் சுற்றுலா பயணிகள் தங்க விரும்பும் மிக பிரமாண்டமான ஹோட்டல் இது ...இதை மிக பிரபலம் ஆக்கியது மும்பை தாக்குதல் ..இங்கு நடந்த தாக்குதல் நம் மிக பெரிய தலைகுனிவு...இதை விரிவாக தெரிந்து கொள்ள ஹோட்டல் மும்பை என்னும் படம் பார்த்தல் போதும்..நடந்த விஷயத்தை கண்முன்னே பார்த்தது போல் இருக்கும் .எரிந்து போன அந்த கட்டிடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புது பொலிவுடன் நிமிர்ந்து நிற்கிறது...
அப்புறம் மும் பையிலே பார்க்க வேண்டிய இடம் னு பார்த்தால் ஷாப்பிங் ...ஷாப்பிங் னு சொன்னால் பெரிய கடைங்க இல்லை ..ரோடு கடைங்க தான் ...இந்தியால எந்த புது மாடல் வந்தாலும் முதல்ல இந்த ரோடு கடைங்களா வந்துட்டு தான் பெரிய பெரிய மாலுங்களுக்கே வரும் ..அப்புறம் பார்க்...ஷாருக்கான் அமிதாப்பச்சன் வீடு மிக அழகான நீண்ட கடற்கரை புறாக்கள் பறக்கும் கடலோரம் இவை எல்லாமே சேர்ந்தது தான் மும்பை ....

சனி, 29 பிப்ரவரி, 2020

நாவூற வைக்கும் சூப்பர் சிக்கன் பிரியாணி

பிரியாணியில் பலவகை இருக்கு ...ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகை டேஸ்டா இருக்கும் ...தலப்பாக்கட்டு பிரியாணி பார்த்தீங்கன்னா அரிசியில் பண்ணுவாங்க அது எப்படி இருக்கும்னா குட்டி குட்டியா இருக்கும் .பிரியாணி கொஞ்சம் பிரவுன் கலர் ல இருக்கும்...சுவையா இருந்தாலும் நிறைய பேருக்கு அது பிடிக்காது ..பிரியாணின்னு சொன்னாலே அது பாசுமதி அரிசியில் பண்ற முஸ்லீம் பிரியாணி தான் ...அதுக்கு தனியா ஒரு சுவையும் மனமும் இருக்கு ...அந்த வாசனையே நிறைய சாப்பிட தூண்டும் ....சுவையான ஒரு முஸ்லீம் கல்யாண பிரியாணி எப்படி செய்யறதுன்னு பார்ப்போமா?....தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி 3 கிளாஸ்
பட்டை மசாலா கிராம்பு ஏலக்காய்
வெங்காயம் 6
தக்காளி 4
பச்சை மிளகாய் 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 கரண்டி
தனி மிளகாய் தூள் 2 ஸ்பூன்
தயிர் 1/2 கப்
புதினா கொத்தமல்லி 2 கைப்பிடி
சிக்கன் 3/4 கிலோ
கல் உப்பு தேவையிலான அளவு
தண்ணீர் 3 கிளாஸ்
எண்ணெய் 3 கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மசாலா போட்டு தாளிக்கவும் நன்றாக பொரிந்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும் அது வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கி சிக்கனை போடவும் பிறகு பச்சைமிளகாய் தயிர் மிளகாய்த்தூள் புதினா கொத்தமல்லி கல் உப்பு என வரிசையாக போட்டு எல்லாமும் சுருங்க வதங்கி மேலே எண்ணெய் மிதந்து வந்ததும் தண்ணீரை ஊற்றவும் ..தண்ணீர் அரிசி எவ்வளவு அளவோ அவ்வளவு அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் அரிசியை போடவும் அரிசியும் சேர்ந்து நன்றாக கொதித்ததும் வேறொரு அடுப்பின் மேல் தோசைக்கல்லை போட்டு அதன் மேல் இந்த பிரியாணி பாத்திரத்தை தூக்கி வைத்து 15 நிமிடம் தம்மில் போட்டு வைக்கவும்...தம்மில் வைக்கும் போது மேலே ஒரு கனமான பாத்திரமோ இல்லை தண்ணீர் நிரம்பிய கிண்ணமோ வைத்து விடவும் அப்போது தான்கீழே உள்ள பதத்திற்கு ஏற்றவாறு மேல் பக்கமும் வெந்திருக்கும் ...15 நிமிடம் ஆனதும் சுவையான சிக்கன் பிரியாணி தயார் ...

சமைப்போம் சுவைப்போம் மகிழ்ந்திருப்போம் ...