செவ்வாய், 28 டிசம்பர், 2010

இயந்திர இதயம்


குதிரைகளிலும் யானைகளிலும்
பயணப்பட்டனர் அன்று
பேருந்தும் ரயிலும் என
இயந்திரமாய் ஆனது இன்று ....

உழவுக்கு எருதுகளும்
பொதி சுமக்க கழுதைகளும்
மாறி இன்று வாகனங்கள் ஆயின .....

அன்பும் பரிவும் பாசமும் நேசமுமாய்
இருந்த மனித இதயங்களை
தேடிய போது தெரிந்தது
எல்லாம் மாறிய போது
இதயங்களும் மாறிவிட்டது இயந்திரமாய் என .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக