பிள்ளைகள் படிக்கவில்லை என்றால்
நான் கற்பிப்பதில் குறை என்கிறாய்
வேலையாட்கள் பணிபுரியவில்லை என்றால்
நான் கண்காணிப்பதில் குறை என்கிறாய்
தொழிலில் நீ தோல்வியுற்றால்
என் ஆலோசனையில் தவறென்று சொல்கிறாய்
குடும்பத்தில் பிரச்சனைஎனில்
என் கட்டுகோப்பில் குறை என்கிறாய்
என் சமையல் ருசிக்கவில்லையெனில்
என் கவனத்தில் குறைஎன்கிறாய்
எவ்வளவு குறைகள் நீ கூறினாலும்
உன் விஷயத்தில் நிறை தான் எனக்கு
நீ என்பதே எதுவுமில்லை
நான் தான் உனக்கு எல்லாமே என்று ......
பின்னீட்டீங்க போங்க
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
கவிதை அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅட அசத்தலுங்க .//
பதிலளிநீக்குநன்றி விஜய் ....
பதிலளிநீக்குநன்றி கரூன் .....
பதிலளிநீக்குநன்றி அரசன் ...நன்றி பிரவீன் ....
பதிலளிநீக்குஉங்க எல்லா கவிதைகளிலுமே இதுதான் டாப் கிளாஸ்.. வெல்டன். மேடம்
பதிலளிநீக்குமிக்க நன்றி .....
பதிலளிநீக்குஇந்த “மனம்” ”மணத்தில்” ஆனதா?
பதிலளிநீக்குஇதன் ஆழம், பிற உறவுகளுக்கும் பொருதுவதாய் உள்ளது (ஆண்-பெண் / பெண்-பெண் / ஆண்-ஆண் என அனைத்திற்கும்) அருமை!
நட்புடன்,
விஜய் :-)