திங்கள், 17 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 3}

முதன்முறையாக என் மகன் எங்களை அவனது விமானத்தில் அழைத்து சென்றான்.அருகில் உள்ள கிம்பர்லே என்னும் ஊருக்கு போனோம்.அந்த இடம் வைர சுரங்கத்திற்கு பெயர் பெற்றது..இயந்திரத்தின் உதவி இன்றி மனிதர்களாலே தோண்டப்பட்ட வைரசுரங்கத்தை  பார்த்தோம்..இது (MAN MADE HOLE)என்று அழைக்கபடுகிறது..

வியாழன், 13 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 3}

பஸ் நிற்கும் இடத்தில எல்லாம் ஆண்களும் அவர்களுக்கு நிகராக பெண்களும் இறங்கி சிகரெட் பிடிகிறார்கள்..பெண்கள் ஆண்களை சார்ந்து இருப்பது இல்லை ..4 மணிக்கு கிறிஸ்டியானா என்கிற இடத்தில இறங்கினோம்..அங்கிருந்து பள்ளிக்கு காரில் சென்றோம் ...அழைத்து செல்ல ஆலன் என்கிற நண்பர் வந்திருந்தார் .அவரும் அங்கு விமானம் ஓட்ட வந்து இருந்தார்.பள்ளி காடு போன்ற இடத்தில இருக்கிறது அங்கு பெரும்பாலோனோர் விமான பள்ளி நடத்துகிறார்கள் ..உலகின் பல இடங்களில் இருந்தும் இங்கு வந்து தங்கி பயிலுகின்றனர் ...என் மகனுடன் ஈரான் ,ஜெர்மனி,கென்யா,நாட்டை சேர்தவர்கள் தங்கி படிக்கின்றனர்..பள்ளியை சுற்றி பார்த்த நங்கள் அந்த பள்ளியை நடத்தும் குடும்பத்தினரை சந்தித்தோம்..சந்திகிறவர்களை கட்டி அணைத்து அன்பை வெளிபடுத்துகின்றனர் ..அந்த பள்ளியை நடத்தும் DJ வின் அம்மாவை எல்லோரும் மம்மி என்றே அழைகிறார்கள் ...மாணவர்களை மிகவும் அன்பாக கவனித்து கொள்கிறார்கள் ...பிளைட் எல்லாம் நிறுத்தி வைத்து உள்ள இடத்திற்கு போய் பார்த்தோம் ..4 பேர் 6 பேர் பயணம் செல்லும் பிளைட் எல்லாம் நிறுத்தி வைத்து இருகிறார்கள் ...மாணவர்கள் அதில் ஓட்டுவதருக்கு பயிற்சி எடுக்கிறார்கள் ..பள்ளியை சுற்றி பார்பதிலேயே இன்றைய நேரம் போனது .....



தொடரும்

திங்கள், 10 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 2}


கவிதைகளின் பாதையில் இருந்து விலகி பயணங்கள் பற்றி எழுதி உள்ளேன் ...நண்பர்கள் படித்து விமர்சித்தால் மகிழ்வேன் .....அன்புடன் சுஜா .......


பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா}  

  ஜோனஸ்பர்க் மிக குளிராக இருந்தது ..நண்பரின் வீட்டில் எங்களுக்காக சிக்கன் செய்து வைத்து இருப்பதாக மகன் சொன்னான் ,சாப்பிட சென்றோம் பிரட் ,வைத்து இருந்தார்கள்..முட்டையை பாதி வேக்காட்டில் வேக வைத்து .சிக்கனை இனிப்பாக செய்து இருந்தார்கள்...எனக்கு பிடிக்கவில்லை என்பதை பார்த்த என் மகன் இங்கிருக்கும் இருபது நாட்களும் இதை தான் சாப்பிட வேண்டும் என்று கூறினான்..அங்கு  அழகழகாய் பறவைகளை வளர்கிறார்கள்...நண்பரின் மனைவி புடவை கொண்டு வரவில்லையா என்று செல்லமாக கோபித்து கொண்டார்...இந்தியாவில் இருந்து வரும் நண்பர்களிடம் இனிப்பும் புடவையும் எதிர்பார்கிறார்கள்...மறுநாள் என் மகன் படிக்கும் பள்ளிக்கு கிளம்பினோம் . எதிர்ப்படும் அனைவரும் goodmorning,how r u என்று கேட்காமல் போவதில்லை...பஸ்ஸில் பயணித்தோம் .பாதையில் ஒரு மேடு பள்ளம கூட கிடையாது...பஸ்ஸில் காபி பிஸ்கட் தருகிறார்கள் ...ஒரு குலுக்கல் கூட இல்லாமல் காபி குடிக்கலாம் ,பஸ்சின் உள்ள டாய்லெட் வசதி உள்ளது...வெள்ளையர்கள் எல்லோரும் இன்முகத்துடன் இருகிறார்கள்...கருப்பர்கள் சிலர் அன்பாகவும் சிலர் சற்று கடுமையான முகத்துடனும் இருகிறார்கள் ....வெள்ளையர்கள் வாழ்வில் ஏற்றதுடனும் கருப்பர்கள் தாழ்ந்த நிலையிலும் இருகிறார்கள்...கருப்பர்கள் மட்டுமே தெருவில் நடக்கிறார்கள்..வெள்ளையர்கள் யாருமே நடப்பதில்லை,காரில் தான் செல்கிறார்கள்.ஏற்றதாழ்வினால் அவர்களுக்குள் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது......





தொடர்வேன்........

சனி, 8 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா}

இந்த ஆண்டு விடுமுறையில்  எனது மகன் படிக்கும் சவுத் ஆப்ரிக்கா நாட்டுக்கு பயணம் செல்ல முடிவெடுத்து நான் எனது கணவர் மகள் மூவரும் பயணித்தோம்..சென்னையில் இருந்து அபுதாபி அங்கிருந்து ஜோஹன்ஸ்பர்க்  போய் சேர்ந்தோம் ...பனிரெண்டு மணி நேர பயணம் ....36000 அடி உயரத்தில் பயணிக்கும் போதே நமக்கு கீழ்  பாலைவனங்கள் , மலைகள். பஞ்சுபோன்ற  மேகங்கள் தெரிகிறது , பார்க்கும் போதே கொள்ளை அழகாக உள்ளது ....ஜன்னல் வழியாக பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் நம் முன்னாடி உள்ள மானிட்டர் வழியாகவே பார்த்து கொண்டு வர முடிகிறது .....அங்கே போய் இறங்கியதுமே ஓர் லேடி கஸ்டம்ஸ் அதிகாரி எங்களை அழைத்து சோதனையிட்டார் ...எங்கள் மகனுக்காக கொண்டு சென்றிருந்த உணவு பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்று கூறினார்...அவ்வளவு உணவு பொருட்களை எடுத்து சென்று மகனிடம் சேர்க்க முடியாமல் போய் விடுமோ என்று கவலையுடன் விவாதம் செய்து கொண்டு இருந்த போது ஒரு முஸ்லிம் நண்பர் அவர்கள் பணத்தை எதிர் பார்கிறார்கள் 200 ரேண்டு கொடுத்தால் விட்டு விடுவார்கள் என்று சொன்னார் .நமது மதிப்பில் 1200 ருபாய் கொடுத்ததும் பேசாமல் அனுப்பி விட்டார்கள்....எங்கே போனாலும் ஊழல் இருக்கும் என்பது புரிந்தது .......அன்று இரவு எனது மகனின் நண்பர் வீட்டில்  தங்கினோம்.....

.தொடர்வேன்.....

ஞாயிறு, 31 மார்ச், 2013

நினைவுகளின் பாரம்

யாரிடமாவது பகிர வேண்டுமெனநினைக்கையில் நீ தான் முதலில் நினைவில் வருகிறாய் ...பயணிக்க வேண்டுமெனில் உன் துணையை தான் தேடுகிறேன் ...சந்தோஷ வேளைகளில் உன் சிரிப்பை எண்ணுகிறேன்...துயரம் சூழ்கையில் உன் ஆறுதலை தேடுகிறேன் ...எல்லாமும் நீதான் ஆனாலும்..?யாரையாவது மறக்க வேண்டுமெனில்உன்னைத்தான் மறக்க நினைக்கிறேன்உன் நினைவுகளின் பாரம் தாளாமல்.........



செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

வெற்றிடம்....

வெற்றிடமாகவே இருக்கிறது
நீ விலகி போன பின் என் இதய அறை
உன் போலவே சிரித்தவரிடம்
உன் தெற்றுப் பல்லின் அழகில்லை 
உன் போலவே பேசியவரிடம்
உன் அறிவின் கூர்மை இல்லை 
உன்னைப் போலவே பழகியவரிடம்
உன் போல அன்பில்லை 
உன் உள்ளம் போல யாருக்கும் 
உள்ளம் வெள்ளையில்லை
நீ நேசித்ததை போல் யாருக்கும் 
என்னை நேசிக்க தெரியவில்லை 
எவ்வளவு பேர் கடந்தாலும் 
யாரும் நிரப்பவில்லை 
உன்னால் ஆன வெற்றிடத்தை ..........

வெள்ளி, 30 நவம்பர், 2012

ரகசிய நூல்

பல்வேறு சொற்களை சேர்த்து
வார்த்தைகளாய் பேசுகின்றேன் உன்னிடம்
அவ்வார்த்தைகளை கோர்த்திருக்கிறது
ரகசிய நூலொன்று.....
வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும்
உனக்கு நூலின் ரகசியம் புரிவதில்லை
என்றேனும் ஒருநாள்
வார்த்தைகள் மறைந்து போகலாம்
அன்று நூலின் ரகசியங்கள் புரியுமுனக்கு
காய்ந்த பூக்களின் உதிர்வுக்கு பின்
தெரியும் நாராய்......