உன்னை நினைக்க எனக்குள் ஆயிரம் காரணங்கள் என்னை மறக்க உனக்குள் ஆயிரம் காரணங்கள் ... அழியாத நினைவு சின்னங்கள் என நீ கொடுத்த பரிசு பொருட்கள் எல்லாம் அழிந்தன காலப்போக்கில் ... அழித்து விடு என நீ சொன்ன உன் நினைவுகள் மட்டும் அழியவில்லை இன்றுவரை ...
இதய வாசலை மூடி விட்டதால் என்னை நுழைய விடாமல் தடுக்கலாம் என்று நினைக்காதே..... உன் இதய வாசல் வழியே வந்து செல்லும் நினைவலைகள் அல்ல நான்..... உன் இதயத்தை துடிக்க வைக்கும் துடிப்பலைகள் நான்......
தான் படைத்த கதைகளை சுமந்து கொண்டு படவுலகில் அலைந்து தோற்று களைத்து வீடு திரும்பிய காதல் கணவனை .... தோளோடு அணைத்து தன்னம்பிக்கை ஊட்டி ஆறுதலோடு தட்டி தூங்க வைத்த காதல் மனைவி ...... இரவு முழுவதும் விழித்திருந்து கண்ணீரோடு கதை புனைகிறாள் மறுநாள் காலை வரப்போகும் மளிகைக்கடை காரனுக்கும் பால்காரனுக்கும் சொல்ல வேண்டிய பதில்களை