வியாழன், 29 ஏப்ரல், 2010

கதை

தான் படைத்த கதைகளை
சுமந்து கொண்டு
படவுலகில் அலைந்து தோற்று
களைத்து வீடு திரும்பிய
காதல் கணவனை ....
தோளோடு அணைத்து
தன்னம்பிக்கை ஊட்டி
ஆறுதலோடு தட்டி தூங்க வைத்த
காதல் மனைவி ......
இரவு முழுவதும் விழித்திருந்து
கண்ணீரோடு கதை புனைகிறாள்
மறுநாள் காலை வரப்போகும்
மளிகைக்கடை காரனுக்கும்
பால்காரனுக்கும் சொல்ல வேண்டிய பதில்களை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக