பல்வேறு சொற்களை சேர்த்து
வார்த்தைகளாய் பேசுகின்றேன் உன்னிடம்
அவ்வார்த்தைகளை கோர்த்திருக்கிறது
ரகசிய நூலொன்று.....
வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும்
உனக்கு நூலின் ரகசியம் புரிவதில்லை
என்றேனும் ஒருநாள்
வார்த்தைகள் மறைந்து போகலாம்
அன்று நூலின் ரகசியங்கள் புரியுமுனக்கு
காய்ந்த பூக்களின் உதிர்வுக்கு பின்
தெரியும் நாராய்......
வெள்ளி, 30 நவம்பர், 2012
சனி, 27 அக்டோபர், 2012
பெயரை தொலைத்தவள்
உன்னை முதன்முதலில்
பார்த்த போது வேணு மாமாவின்
மனைவி என்று எல்லோருக்கும் அறிமுகபடுத்தப்பட்டாய்
பாலா பிறந்த பின் எல்லோரும் பாலாவின்
அம்மா என்றே அழைத்தனர்
மாமாவின் கடையை பார்த்து கொண்டதால்
கடைக்காரம்மா என்று அழைத்தனர் பலர்
நேசத்தையும் பிரியத்தையும் மட்டுமே பகிர
தெரிந்த உன்னை பிரிந்து புகுந்த வீடு
சென்ற அன்று உன்னை கட்டியணைத்து
அழுது பிரிந்தவள்
பின்னொரு நாளில் விசாலாட்சி இறந்து விட்டாள்
என்கிற செய்தி கேள்வியுற்ற போதினில் அந்த செய்தி
எளிதாய் என்னை கடந்து சென்றது
உன் பெயர் தொலைத்த காரணத்தினால் .....
பார்த்த போது வேணு மாமாவின்
மனைவி என்று எல்லோருக்கும் அறிமுகபடுத்தப்பட்டாய்
பாலா பிறந்த பின் எல்லோரும் பாலாவின்
அம்மா என்றே அழைத்தனர்
மாமாவின் கடையை பார்த்து கொண்டதால்
கடைக்காரம்மா என்று அழைத்தனர் பலர்
நேசத்தையும் பிரியத்தையும் மட்டுமே பகிர
தெரிந்த உன்னை பிரிந்து புகுந்த வீடு
சென்ற அன்று உன்னை கட்டியணைத்து
அழுது பிரிந்தவள்
பின்னொரு நாளில் விசாலாட்சி இறந்து விட்டாள்
என்கிற செய்தி கேள்வியுற்ற போதினில் அந்த செய்தி
எளிதாய் என்னை கடந்து சென்றது
உன் பெயர் தொலைத்த காரணத்தினால் .....
வெள்ளி, 5 அக்டோபர், 2012
சொல்ல முடியவில்லை ...
நீ பார்க்கவில்லை என்பதால்
அலங்கரிப்பதை நிறுத்தினேன்....
நீ கேட்கவில்லை என்பதால்
என் கொலுசுகளை கழற்றினேன்...
நீ ரசிக்கவில்லை என்பதால்
என் புன்னகையை தொலைத்தேன்...
நீ நினைப்பதில்லை என்பதால்
உன்னை நினைப்பதில்லை என்று மட்டும்
சொல்ல முடியவில்லை என்னால்.......

அலங்கரிப்பதை நிறுத்தினேன்....
நீ கேட்கவில்லை என்பதால்
என் கொலுசுகளை கழற்றினேன்...
நீ ரசிக்கவில்லை என்பதால்
என் புன்னகையை தொலைத்தேன்...
நீ நினைப்பதில்லை என்பதால்
உன்னை நினைப்பதில்லை என்று மட்டும்
சொல்ல முடியவில்லை என்னால்.......

செவ்வாய், 11 செப்டம்பர், 2012
ஜன்னலோர இருக்கை
என்றுமே வாய்ப்பதில்லை
பிரியமான ஜன்னலோர இருக்கை
இயற்க்கையின் அழகையும்
பின்னோக்கி ஓடும் மரங்களையும்
சில்லென்ற காற்றையும் தூர இருந்தே
ரசிக்க முடிகிறது எப்பொழுதும்
சிறுவயதினில் அண்ணனின் அடக்குமுறையால்
பின் தம்பியின் ஆசை என்று சொல்லி
வயது வந்த பின் ஆண்களின்
பார்வை பட கூடாதென்று சொல்லி
திருமணம் ஆனதும் கணவரின் சொல்படி
பின் பிள்ளைகளின் விருப்பமென
எப்பொழுதும் இழந்து கொண்டே இருக்கிறேன்
என் பிரியமான ஜன்னலோர பயணத்தை
என்னிடம் இருந்து பிடுங்கப்படும்
ஒவ்வொரு முறையும் பெயரிடப்படுகிறது
விட்டுகொடுத்தல் என்று..........
பிரியமான ஜன்னலோர இருக்கை
இயற்க்கையின் அழகையும்
பின்னோக்கி ஓடும் மரங்களையும்
சில்லென்ற காற்றையும் தூர இருந்தே
ரசிக்க முடிகிறது எப்பொழுதும்
சிறுவயதினில் அண்ணனின் அடக்குமுறையால்
பின் தம்பியின் ஆசை என்று சொல்லி
வயது வந்த பின் ஆண்களின்
பார்வை பட கூடாதென்று சொல்லி
திருமணம் ஆனதும் கணவரின் சொல்படி
பின் பிள்ளைகளின் விருப்பமென
எப்பொழுதும் இழந்து கொண்டே இருக்கிறேன்
என் பிரியமான ஜன்னலோர பயணத்தை
என்னிடம் இருந்து பிடுங்கப்படும்
ஒவ்வொரு முறையும் பெயரிடப்படுகிறது
விட்டுகொடுத்தல் என்று..........
செவ்வாய், 24 ஜூலை, 2012
தொலைபேசி காதல்
முன்பெல்லாம் எப்போதும்
தொடர்பில் இருந்தாய்
அழைப்புக்கெல்லாம் பதில் அளித்தாய்
நாட்கள் சென்றதும்
என் அழைப்புக்கள் எல்லாம் தொலைக்கப்பட்டது
பின் அழைத்த போதெல்லாம்
தொடர்பு எல்லைக்கு அப்பால்
சென்று விட்டது உனது எண்
அழைப்புகளோ ஏற்புகளோ இல்லை எனினும்
எனது தொலைபேசி உனது எண்ணையும்
என் இதயம் உன்னையும்
அழிக்காமல் பதிந்துள்ளது
அன்பின் மிச்ச சுவடுகளாய் ......
ஞாயிறு, 27 மே, 2012
காத்திருக்கிறேன்
.......
ஒற்றை பாதையில் இணைந்து
நடந்தோம் இன்பமாய்
பிரிவொன்று வந்தது ஓர்நாள்....
பிரிந்து நீ சென்றாலும்
பல வழிகளில் தொடர்கிறது
உன் பயணங்கள்.....
என்றேனும் ஓர் நாள்
மீண்டும் நாம் இணைந்து
பயணிப்போம் என்றெண்ணி
நீ வரும் வழியை பார்த்து கொண்டே
காத்துக் கொண்டு இருக்கின்றேன்
நீ விட்டு சென்ற இடத்திலேயே......
திங்கள், 16 ஏப்ரல், 2012
அத்தையின் வீடு
தாண்டி போக மனமின்றி
அழகாய் வரவேற்கும்
அத்தை வீட்டு முற்றம்
காதுக்கினிய கொலுசொலியின் கூடவே
ஒத்து ஊதும் அத்தையின் மெட்டி சத்தம்
ஊதுபத்தியின் மணம் மனதினை மயக்கும்
வாய் நிறைய சிரிப்பின் ஊடே
வாடி என்றழைக்கும் பாசமிகு அத்தை
கட்டினாள் மாடி வீடு ...
இன்று உட்கார்ந்தாலே அழுக்காகி விடுமோ
புத்தம்புது சோபா என்று
முகம் சுளிக்கும் வரவேற்பு
கொலுசொலிக்கு பதிலாக வீட்டினுள்ளே
பணத்தின் செழிப்பை உணர்த்தும்
செருப்பினது சத்தம்
ஊதுபத்தி மணமில்லை ஆளுக்கொரு
விதமாய் பூசும் நறுமணத்தின் வாசம்
பாதி கண்கள் தொலைகாட்சியிலும்
பாதி புன்னகை உதட்டிலும் கொண்டு
வா என்று அழைக்கும் அத்தையின் வீடு
இன்று உடனே தாண்டி போக சொல்கிறது
உள் நுழைய மனமின்றி .......
அழகாய் வரவேற்கும்
அத்தை வீட்டு முற்றம்
காதுக்கினிய கொலுசொலியின் கூடவே
ஒத்து ஊதும் அத்தையின் மெட்டி சத்தம்
ஊதுபத்தியின் மணம் மனதினை மயக்கும்
வாய் நிறைய சிரிப்பின் ஊடே
வாடி என்றழைக்கும் பாசமிகு அத்தை
கட்டினாள் மாடி வீடு ...
இன்று உட்கார்ந்தாலே அழுக்காகி விடுமோ
புத்தம்புது சோபா என்று
முகம் சுளிக்கும் வரவேற்பு
கொலுசொலிக்கு பதிலாக வீட்டினுள்ளே
பணத்தின் செழிப்பை உணர்த்தும்
செருப்பினது சத்தம்
ஊதுபத்தி மணமில்லை ஆளுக்கொரு
விதமாய் பூசும் நறுமணத்தின் வாசம்
பாதி கண்கள் தொலைகாட்சியிலும்
பாதி புன்னகை உதட்டிலும் கொண்டு
வா என்று அழைக்கும் அத்தையின் வீடு
இன்று உடனே தாண்டி போக சொல்கிறது
உள் நுழைய மனமின்றி .......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)