வியாழன், 21 ஏப்ரல், 2011

வாழ்வை தொலைத்தவர்கள்


திரைகடல் ஓடி திரவியம்சேர்த்தாலும்
போதுமென்ற மனதுடன்
சந்தோஷமாய் வாழ்ந்தனர் அன்று
வலைகடலில் மூழ்கி
இறுதி காலம் வரை திரவியம்
தேடுகின்றனர் இன்று ......

காலம் நேரம் பாராமல்
கணினி முன் பணிபுரிகின்றனர்
வீட்டுகடனுக்கும் வாகனகடனுக்கும்
பிள்ளைகளின் கல்விக்கும்
ஆடம்பர தேவைகளுக்கும்
தன் வாழ்வை அடமானம் வைக்கின்றனர் .....

அன்பு,பாசம்,நேசமென்றால்
தேவையில்லாத பேச்சு என்கின்றனர்
கணினியில் உழன்று உழன்று
இயந்திரமாய் மாறி போனவர்கள்
சொத்துக்கள் சேர்கின்றன
பிள்ளைகள் வளர்ந்து தன்வழியே போகின்றனர் ....

பணத்தின் பின்னே போனவர்கள்
தன்னந்தனியே வாழ்கின்றனர்
வங்கியின் இருப்பை கொண்டு
வைத்தியர்களின் துணையோடு
இழந்த வாழ்வை எண்ணி கொண்டு ......

6 கருத்துகள்:

  1. இன்றைய கால வாழ்க்கை முறையினை கவிதையாய் வார்த்துள்ளிர்கள் மிக அருமையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  2. உண்மையான வரிகள் அருமை


    http://writerprabashkaran.blogspot.com/2011/04/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான்

    இயந்திரங்களுக்கு மத்தியில் இயல் வாழ்க்கை மறைந்தே போயின

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  4. அட....!!!!!!!!!!!!!!!!!!!!!!

    தேடித்தேடிப்பார்த்தும் ஒரு எழுத்துப்பிழை கூட இல்லையே.. செம..

    பதிலளிநீக்கு
  5. உங்க 100 வது கவிதைக்கும் , 101 வது கவிதைக்கும் நல்ல வெரைட்டி காட்டி இருக்கீங்க.. இட் ஈஸ் வெரி ரேர்.. குட்

    பதிலளிநீக்கு