ஏசி காரில் சொகுசு பயணம்
தூசி படாமல் பயணிக்கும் அனுபவம்
ரயிலிலோ பேருந்ததிலோ நெரிசலில்
அவதியுற அவசியமில்லை
பயணம் என்னவோ சுகமானது தான்
ஆனால் .........
கால்கடுக்க காத்திருந்து பேருந்தில்
இடிபடாமல் பாதுகாத்து
கையிருப்பெல்லாம் கரைந்தாலும்
பிள்ளைகளின் முகமலர்வை மட்டுமே
கருத்தாக கொண்டு கதை சொல்லியே
நடக்க வைத்து வீடு கொண்டு வந்து
சேர்க்கும் அப்பாவுடனான பயணங்கள்
அளித்த ஆனந்தம் இல்லை
இன்றைய பயணங்களின் போது .......
ரசிக்கும் படி இருக்கும் அனுபவ கவிதை
பதிலளிநீக்குஒவ்வொரு பெண்ணுக்கும் அப்பாவுடனான பயணம் இனிமையானதே.. அதை வார்த்தைகளில் வடித்த விதமும், இன்றைய வாழ்வோடு ஒப்பீடு செய்த விதமும் அழகு.
பதிலளிநீக்குஎஸ் எஸ் சரியாக சொன்னீர்கள்....
பதிலளிநீக்குஅருமையான கவிதை தோழி...நாம் எவ்வளவு தான் பொருளாதார ரீதியா வளர்ந்தாலும், நம் வளர்ச்சியின் வேர்கள், நமக்காய் தனை வருத்தி, நமை வளர்த்த அந்த அனுபவங்கள் என்றும் அருமை என்பதை தங்கள் கவிதை அழகாய் உணர்த்தியது....வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉண்மை, முற்றிலும் உண்மை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
உண்மை. அருமை பாராட்டுக்கள்
பதிலளிநீக்குஇனிமை
பதிலளிநீக்குyes...
பதிலளிநீக்கு