என்றுமே வாய்ப்பதில்லை
பிரியமான ஜன்னலோர இருக்கை
இயற்க்கையின் அழகையும்
பின்னோக்கி ஓடும் மரங்களையும்
சில்லென்ற காற்றையும் தூர இருந்தே
ரசிக்க முடிகிறது எப்பொழுதும்
சிறுவயதினில் அண்ணனின் அடக்குமுறையால்
பின் தம்பியின் ஆசை என்று சொல்லி
வயது வந்த பின் ஆண்களின்
பார்வை பட கூடாதென்று சொல்லி
திருமணம் ஆனதும் கணவரின் சொல்படி
பின் பிள்ளைகளின் விருப்பமென
எப்பொழுதும் இழந்து கொண்டே இருக்கிறேன்
என் பிரியமான ஜன்னலோர பயணத்தை
என்னிடம் இருந்து பிடுங்கப்படும்
ஒவ்வொரு முறையும் பெயரிடப்படுகிறது
விட்டுகொடுத்தல் என்று..........
செவ்வாய், 11 செப்டம்பர், 2012
செவ்வாய், 24 ஜூலை, 2012
தொலைபேசி காதல்
முன்பெல்லாம் எப்போதும்
தொடர்பில் இருந்தாய்
அழைப்புக்கெல்லாம் பதில் அளித்தாய்
நாட்கள் சென்றதும்
என் அழைப்புக்கள் எல்லாம் தொலைக்கப்பட்டது
பின் அழைத்த போதெல்லாம்
தொடர்பு எல்லைக்கு அப்பால்
சென்று விட்டது உனது எண்
அழைப்புகளோ ஏற்புகளோ இல்லை எனினும்
எனது தொலைபேசி உனது எண்ணையும்
என் இதயம் உன்னையும்
அழிக்காமல் பதிந்துள்ளது
அன்பின் மிச்ச சுவடுகளாய் ......
ஞாயிறு, 27 மே, 2012
காத்திருக்கிறேன்
.......
ஒற்றை பாதையில் இணைந்து
நடந்தோம் இன்பமாய்
பிரிவொன்று வந்தது ஓர்நாள்....
பிரிந்து நீ சென்றாலும்
பல வழிகளில் தொடர்கிறது
உன் பயணங்கள்.....
என்றேனும் ஓர் நாள்
மீண்டும் நாம் இணைந்து
பயணிப்போம் என்றெண்ணி
நீ வரும் வழியை பார்த்து கொண்டே
காத்துக் கொண்டு இருக்கின்றேன்
நீ விட்டு சென்ற இடத்திலேயே......
திங்கள், 16 ஏப்ரல், 2012
அத்தையின் வீடு
தாண்டி போக மனமின்றி
அழகாய் வரவேற்கும்
அத்தை வீட்டு முற்றம்
காதுக்கினிய கொலுசொலியின் கூடவே
ஒத்து ஊதும் அத்தையின் மெட்டி சத்தம்
ஊதுபத்தியின் மணம் மனதினை மயக்கும்
வாய் நிறைய சிரிப்பின் ஊடே
வாடி என்றழைக்கும் பாசமிகு அத்தை
கட்டினாள் மாடி வீடு ...
இன்று உட்கார்ந்தாலே அழுக்காகி விடுமோ
புத்தம்புது சோபா என்று
முகம் சுளிக்கும் வரவேற்பு
கொலுசொலிக்கு பதிலாக வீட்டினுள்ளே
பணத்தின் செழிப்பை உணர்த்தும்
செருப்பினது சத்தம்
ஊதுபத்தி மணமில்லை ஆளுக்கொரு
விதமாய் பூசும் நறுமணத்தின் வாசம்
பாதி கண்கள் தொலைகாட்சியிலும்
பாதி புன்னகை உதட்டிலும் கொண்டு
வா என்று அழைக்கும் அத்தையின் வீடு
இன்று உடனே தாண்டி போக சொல்கிறது
உள் நுழைய மனமின்றி .......
அழகாய் வரவேற்கும்
அத்தை வீட்டு முற்றம்
காதுக்கினிய கொலுசொலியின் கூடவே
ஒத்து ஊதும் அத்தையின் மெட்டி சத்தம்
ஊதுபத்தியின் மணம் மனதினை மயக்கும்
வாய் நிறைய சிரிப்பின் ஊடே
வாடி என்றழைக்கும் பாசமிகு அத்தை
கட்டினாள் மாடி வீடு ...
இன்று உட்கார்ந்தாலே அழுக்காகி விடுமோ
புத்தம்புது சோபா என்று
முகம் சுளிக்கும் வரவேற்பு
கொலுசொலிக்கு பதிலாக வீட்டினுள்ளே
பணத்தின் செழிப்பை உணர்த்தும்
செருப்பினது சத்தம்
ஊதுபத்தி மணமில்லை ஆளுக்கொரு
விதமாய் பூசும் நறுமணத்தின் வாசம்
பாதி கண்கள் தொலைகாட்சியிலும்
பாதி புன்னகை உதட்டிலும் கொண்டு
வா என்று அழைக்கும் அத்தையின் வீடு
இன்று உடனே தாண்டி போக சொல்கிறது
உள் நுழைய மனமின்றி .......
சனி, 7 ஏப்ரல், 2012
தொலைக்கபடும் பொருள்
உன் கைகளில் கிடைக்கும் பொருளாய்
இருப்பதை விட உன்னால்
தொலைக்கப்படும் பொருளாய்
இருப்பதையே விரும்புகிறேன்
நேசிக்கபடுவதும் தேடப்படுவதும்
தொலைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே என்பதால் ...♪♫♪.¸¸.♪♫♪♫♪.¸¸.♪♫
இருப்பதை விட உன்னால்
தொலைக்கப்படும் பொருளாய்
இருப்பதையே விரும்புகிறேன்
நேசிக்கபடுவதும் தேடப்படுவதும்
தொலைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே என்பதால் ...♪♫♪.¸¸.♪♫♪♫♪.¸¸.♪♫
வெள்ளி, 30 மார்ச், 2012
மாமாவின் மரணசெய்தி..
அதிகாலை வேளையில்
அலறி அழைத்த தொலைபேசியில் வந்தது
அன்பும் பாசமுமாய்
தோளில் தூக்கி வளர்த்த
மாமாவின் மரணசெய்தி ....
கணக்கிட்டது பல காரணங்களை
பணம் மட்டுமே பிரதானமென
மாறிவிட்ட பொருளாதார மனது...
பயணதூரம் கணக்கிடப்பட்டது முதலில்
தொலைவும் அதிகம் பணமும் விரயம்,
பிள்ளைகளின் படிப்பு பாழகுமோ ஒருநாள்?
எங்கள் வீட்டு துயரத்திற்கு
துக்கம் கேட்காமல் போனாரே!
அம்மாவும் தம்பியும் போனால் போதாதோ?
என்றெல்லாம் எண்ணமிட்டது மனது
இறுதியாய் முடிவெடுத்து
ஒரு ரூபாய் செலவழித்து
தொலைபேசியில் இரங்கல் தெரிவித்து
ஊரிலேயே இல்லை நான்
என்கிற ஒற்றை பொய்யுடன் முடிந்து போனது
மாமாவின் மரணசெய்தி.......
அலறி அழைத்த தொலைபேசியில் வந்தது
அன்பும் பாசமுமாய்
தோளில் தூக்கி வளர்த்த
மாமாவின் மரணசெய்தி ....
கணக்கிட்டது பல காரணங்களை
பணம் மட்டுமே பிரதானமென
மாறிவிட்ட பொருளாதார மனது...
பயணதூரம் கணக்கிடப்பட்டது முதலில்
தொலைவும் அதிகம் பணமும் விரயம்,
பிள்ளைகளின் படிப்பு பாழகுமோ ஒருநாள்?
எங்கள் வீட்டு துயரத்திற்கு
துக்கம் கேட்காமல் போனாரே!
அம்மாவும் தம்பியும் போனால் போதாதோ?
என்றெல்லாம் எண்ணமிட்டது மனது
இறுதியாய் முடிவெடுத்து
ஒரு ரூபாய் செலவழித்து
தொலைபேசியில் இரங்கல் தெரிவித்து
ஊரிலேயே இல்லை நான்
என்கிற ஒற்றை பொய்யுடன் முடிந்து போனது
மாமாவின் மரணசெய்தி.......
ஞாயிறு, 25 மார்ச், 2012
காதல் கவிதைகள்
காத்திருத்தல்
காத்திருப்பதின் வலி உனக்கு
புரிய வைக்க காத்திருக்க வைத்தேன்
இப்போதும் எனக்கு தான் வலிக்கிறது
உன்னை காத்திருக்க வைத்ததால்......
மணம்
என்றுமே மணத்ததில்லை மல்லிகை
இன்று உன் கையில் வாங்கி சூடிய போது
மணத்தது போல் .....
புகைப்படம்
உற்று பார்க்காதே என்னிடம் உள்ள
உன் புகைப்படத்தை
என் உதட்டின் ரேகைகள் மறைத்திருக்கிறது
உன் முகத்தின் அழகை ....
நினைவு விதை
வேரோடு பிடுங்குவதாய் எண்ணி
முழுவதும் களைந்து எறிந்தேன்
உன் காதலை
நியாபக தூறல்கள் விழும் போதெல்லாம்
துளிர்த்து எழுகிறது எங்கோ ஆழத்தில்
படிந்திருக்கும் உன் நினைவு விதைகள் .....
பார்வை
ஆயிரம் வார்த்தைகள் பேசும்
உன் உதடுகளை விட
உன் ஆழ பார்வை ஒன்றே
என் மீதான உன் காதலை
அதிகம் சொல்கிறது ......
காத்திருப்பதின் வலி உனக்கு
புரிய வைக்க காத்திருக்க வைத்தேன்
இப்போதும் எனக்கு தான் வலிக்கிறது
உன்னை காத்திருக்க வைத்ததால்......
மணம்
என்றுமே மணத்ததில்லை மல்லிகை
இன்று உன் கையில் வாங்கி சூடிய போது
மணத்தது போல் .....
புகைப்படம்
உற்று பார்க்காதே என்னிடம் உள்ள
உன் புகைப்படத்தை
என் உதட்டின் ரேகைகள் மறைத்திருக்கிறது
உன் முகத்தின் அழகை ....
நினைவு விதை
வேரோடு பிடுங்குவதாய் எண்ணி
முழுவதும் களைந்து எறிந்தேன்
உன் காதலை
நியாபக தூறல்கள் விழும் போதெல்லாம்
துளிர்த்து எழுகிறது எங்கோ ஆழத்தில்
படிந்திருக்கும் உன் நினைவு விதைகள் .....
பார்வை
ஆயிரம் வார்த்தைகள் பேசும்
உன் உதடுகளை விட
உன் ஆழ பார்வை ஒன்றே
என் மீதான உன் காதலை
அதிகம் சொல்கிறது ......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)