இணையாய் பறப்போமென்று இணைந்தோம்
திருமணத்தில் ....
பருந்தென நீ உயரும் போதெல்லாம்
ஊர்குருவியாய் வரையறுக்கப்பட்டது
என் எல்லைகள் ....
வெகு தூரங்களை நீ கடக்கும் போதெல்லாம்
அதில் பாதி தான் என் அளவென்றாய்....
சுதந்திரங்கள் என்பது உனக்கு மட்டும் சொந்தமாயின
என் கைகளுக்கு விலங்கிடப்பட்டு ....
நாட்கள் செல்ல செல்ல என் சிறகுகள் ஒவ்வொன்றாய்
பிடுங்கப்பட்டு நூல்களாய் கோர்க்கப்பட்டன....
நூல்கள் உன் கைகளில் சிறைபட்டு
பறவையாய் இருந்த நான் பட்டமானேன்....
திங்கள், 27 பிப்ரவரி, 2012
வியாழன், 16 பிப்ரவரி, 2012
அழகோ அழகு .......
புதியதாய் பூத்த மலரின்
அழகை கண்டு ரசித்த நாளில்
இது தான் உலகிலேயே அழகென்று
எண்ணி வியந்தேன் ....
பௌர்ணமி நிலவின் ஒளி
விழுந்த கடல் அலைகளை
வெள்ளியின் உருகலாய்
பார்த்த அன்று இதுவன்றோ
அழகென்று சிலிர்தேன் ...
உச்சி மலையின் மீது
சில்லென்ற பனிகாற்றில்
மேக கூட்டத்தின் உள்
நடக்கையில் இதைவிட அழகுண்டா
என்று எண்ணி ரசித்தேன் ....
பார்த்து வியந்து சிலிர்த்து ரசித்த
காட்சிகளின் அழகெல்லாம் தோற்றது
இதழ் கடித்து நீ சிரித்த ஒற்றை சிரிப்பினில் .......
அழகை கண்டு ரசித்த நாளில்
இது தான் உலகிலேயே அழகென்று
எண்ணி வியந்தேன் ....
பௌர்ணமி நிலவின் ஒளி
விழுந்த கடல் அலைகளை
வெள்ளியின் உருகலாய்
பார்த்த அன்று இதுவன்றோ
அழகென்று சிலிர்தேன் ...
உச்சி மலையின் மீது
சில்லென்ற பனிகாற்றில்
மேக கூட்டத்தின் உள்
நடக்கையில் இதைவிட அழகுண்டா
என்று எண்ணி ரசித்தேன் ....
பார்த்து வியந்து சிலிர்த்து ரசித்த
காட்சிகளின் அழகெல்லாம் தோற்றது
இதழ் கடித்து நீ சிரித்த ஒற்றை சிரிப்பினில் .......
திங்கள், 23 ஜனவரி, 2012
சாத்தியமில்லாத ஒன்று
பொய் இல்லாத அரசியல்வாதி
உண்மை பேசும் வக்கீல்
கோபமில்ல ஆண்கள்
கண்ணீரில்லாத பெண்கள்
ஒப்பனை இல்லா யுவதி
சிரிப்பில்லா குழந்தை ....
இதெல்லாமும் சாத்தியமாகலாம்
ஒருநாள்
சாத்தியமே இல்லாத ஒன்று உண்டென்றால்
அது நீயில்லாத நான் ......
உண்மை பேசும் வக்கீல்
கோபமில்ல ஆண்கள்
கண்ணீரில்லாத பெண்கள்
ஒப்பனை இல்லா யுவதி
சிரிப்பில்லா குழந்தை ....
இதெல்லாமும் சாத்தியமாகலாம்
ஒருநாள்
சாத்தியமே இல்லாத ஒன்று உண்டென்றால்
அது நீயில்லாத நான் ......
வியாழன், 29 டிசம்பர், 2011
குமரியின் குமுறல்
குழந்தையாய் இருந்த நான்
குமரி ஆனேன் நேற்று ....
நேற்று வரை எனக்கும்
எனது தோழனுக்கும் இருந்த உறவு
இன்று ஆனது தப்பாய் ....
இதுவரை எங்களது பார்வையில்
அன்பும் சந்தோஷமும் கண்டவர்கள்
இன்று அதை காதல் என்கிறார்கள் ...
நேற்றுவரை எங்களது சிரிப்பை
உல்லாசம் குழந்தை தனம் என்றவர்கள்
இன்று கள்ளத்தனம் பல்லிளிப்பு என்கிறார்கள் ....
நேற்று வரை எங்களது கைகோர்பில்
வெள்ளந்தி தனமும் நட்பும் பார்த்தவர்கள்
இன்று அதை காமம் என்கிறார்கள் ....
குற்றம் எங்கள் மீதல்ல
இன்னமும் நாங்களே கடந்திராத எங்களது பால்யத்தை
நீங்கள் கடந்தது தான் குற்றம் .......
குமரி ஆனேன் நேற்று ....
நேற்று வரை எனக்கும்
எனது தோழனுக்கும் இருந்த உறவு
இன்று ஆனது தப்பாய் ....
இதுவரை எங்களது பார்வையில்
அன்பும் சந்தோஷமும் கண்டவர்கள்
இன்று அதை காதல் என்கிறார்கள் ...
நேற்றுவரை எங்களது சிரிப்பை
உல்லாசம் குழந்தை தனம் என்றவர்கள்
இன்று கள்ளத்தனம் பல்லிளிப்பு என்கிறார்கள் ....
நேற்று வரை எங்களது கைகோர்பில்
வெள்ளந்தி தனமும் நட்பும் பார்த்தவர்கள்
இன்று அதை காமம் என்கிறார்கள் ....
குற்றம் எங்கள் மீதல்ல
இன்னமும் நாங்களே கடந்திராத எங்களது பால்யத்தை
நீங்கள் கடந்தது தான் குற்றம் .......
செவ்வாய், 20 டிசம்பர், 2011
ஆசை
தேர் போல் ஜோடனை
அழகான தோரணங்கள்
வித விதமான மாலைகள்
மனம் மயக்கும் வாசனை திரவியங்கள்
பாழும் மனதில் தோன்றுகிறது ஆசை
பாடையின் மீதும் .......
அழகான தோரணங்கள்
வித விதமான மாலைகள்
மனம் மயக்கும் வாசனை திரவியங்கள்
பாழும் மனதில் தோன்றுகிறது ஆசை
பாடையின் மீதும் .......
சனி, 17 டிசம்பர், 2011
கொலுசொலி
ஆளான நாள் முதலாய்
அணிய சொல்லி வற்புறுத்துகிறாள் அம்மா..
கொத்து கொத்தாய் முத்துகளோடு கூடி
சத்தமிடும் கொலுசுகளை ......
இன்று எடுத்து அணிந்தேன்
அழகான கொத்து கொலுசினை
சந்தோஷப் படுகிறாள் அம்மா
இன்றாவது தன் பேச்சை கேட்கிறாளே என்று....
புரியவில்லை அவர்களுக்கு
மெல்லிய எனது கொலுசொலி
உன் முகம் திருப்பும் அளவில்
சத்தமிடவில்லை என்பதால் மாற்றுகிறேன் என்று ....
அணிய சொல்லி வற்புறுத்துகிறாள் அம்மா..
கொத்து கொத்தாய் முத்துகளோடு கூடி
சத்தமிடும் கொலுசுகளை ......
இன்று எடுத்து அணிந்தேன்
அழகான கொத்து கொலுசினை
சந்தோஷப் படுகிறாள் அம்மா
இன்றாவது தன் பேச்சை கேட்கிறாளே என்று....
புரியவில்லை அவர்களுக்கு
மெல்லிய எனது கொலுசொலி
உன் முகம் திருப்பும் அளவில்
சத்தமிடவில்லை என்பதால் மாற்றுகிறேன் என்று ....
ஞாயிறு, 11 டிசம்பர், 2011
மஞ்சள்நீராடு விழா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
