சனி, 4 பிப்ரவரி, 2017

பயணங்களின் பதிவுகள் தேனி மாவட்டம்  (மேகமலை)








    மேகமலை..... வெகுநாட்களாக  போக விரும்பிய ஒரு இடம்...அழகிய தேயிலை தோட்டங்களும் ,ஏலக்காய்அ தோட்டங்களும் ,அணைகளும்  ,முகத்தை வருடும் மேககூட்டமும் சில்லென்ற இயற்கை பிரதேசத்தை கனவு கொண்டு சென்ற எங்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது ,,,மலை அடிவாரம் வரை புதிய ரோடு அழகாக இருந்தது ,,,வனகாவலரும் ஒன்றும் கூறாமல் அனுப்பினார்....மலைபாதை குண்டும்குழியுமாக  27கிலோமீட்டர் தூரத்தை  4 மணி நேரமாக  கடந்தோம் ...

     பாதை போடும் பொருட்டு  வழிநெடுக வெடி வைத்து வெடிப்பதால் புழுதியும் அனலுமாக இருந்தது ....மேலே சென்று  சேர்வதற்குள் சோர்ந்து போனோம் ...மேலே சென்றதும் ஹைவேஸ் என்கிற இடத்தை அடைந்ததும் அனல்  குறைந்து சற்று குளிர் உணர்ந்தோம்...பச்சை படுகையென விரிந்திருந்த தேயிலை தோட்டங்கள் சிறிய பள்ளத்தாக்கில் ஓடும் நீர் ... வீடு போன்ற மெஸ்,,,,குறைவான விலையில் சாப்பாடு என  அந்த இடத்தில உற்சாகமாக சில பொழுதுகளை கழித்தோம் .....
     
   சில இடங்கள் நேரில் பார்பதை விட கற்பனையிலேயே மிக அழகாக இருக்கும் என்பதை பார்த்து அனுபவித்து தெரிந்து கொண்ட இடம் ....


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக