திங்கள், 20 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3) சிறப்பு பதிவு 18
TIME TRAVEL

2007...வியாபாரமும் வாழ்கையும் நல்லபடியாகவே போனது....நிறைய பயணம் செய்ய ஆரம்பித்தோம்...முன்பெல்லாம் கடையை விட்டு வர முடியாததால் எங்கும் போவது அரிதாக இருந்தது...கடை மூடியதும் வீட்டில் இருந்தே வியாபாரம் செய்ததால் அனைத்தையும் போனிலேயே முடிக்க ஆரம்பித்தார்..... பயணங்கள் அதிகமாயின....

பிள்ளைகள் விஷயத்தில் அவர் அப்படியே சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் தான்....பிள்ளைகளுக்கும் சேர்த்து இவரே எல்லாவற்றையும் யோசிப்பார்....99% சுதந்திரம் கொடுத்திருந்தாலும் 1% கண்டிப்பால் தன் கட்டுக்குள்ளே வைத்திருப்பார் பிள்ளைகளை .....மகன் வெளிநாடு போனபிறகும் காலை முதல் இரவுவரை பேசிக்கொண்டே இருப்பார்... அப்பா எந்த நிமிடம் போன் செய்வார் என்பது மகனுக்குஅத்துபடி...அப்பாவுக்கும் மகனுக்கும் அப்படி ஒரு அலைவரிசை....மகளாவது கொஞ்சம் சுயம் பேசுவாள் ...மகன் அப்பா நினைத்ததை மட்டுமே பேசுவான்....அப்படி ஒரு நெருக்கம் அவர்களுக்குள்....மகளுக்கு என்னிடம் தான் நெருக்கம் ....பிள்ளைகள் எப்போதும் அருகிலேயே இருக்க வேண்டும் அவருக்கு...எங்களுக்குள் ரகசியங்கள் என்று எதுவுமில்லை....எல்லாவற்றையும் டிஸ்கஸ் பண்ணுவோம் .....தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

2 கருத்துகள்: