சனி, 11 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3/2016


)சிறப்பு பதிவு 8
TIME TRAVEL

1997.....திருமண வாழ்விலும் வியாபாரத்திலும் அவர் பெற்ற வெற்றி அவரின் தன்னம்பிக்கையை அதிகரித்தது...அவர் தன் வாழ்க்கைமுறையை மாற்றி கொள்ள ஆரம்பித்தார்...பணம் வந்ததும் ஒரு மனிதனின் தோரணைகள் மாறுவது ஏனெனில் அவனுக்கே தன்மேல் பெரும் நம்பிக்கை வருவதால் தான்.... .

உறவுகள் எல்லாம் அவர் மேல் பெரும் நம்பிக்கையும் மரியாதையையும் கொள்ள ஆரம்பித்தனர்....பொறுப்பில்லாத ரௌடி பையன் என்கிற பெயர் மாறி ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவனாகவும் ஒரு சிறந்த வியாபாரியாகவும் அனைவரும் மதிக்க தொடங்கினர்..இரு குடும்பத்தினரும் இவரின் ஆலோசனை கேட்டு செயல்படும் அளவில் இவரது வளர்ச்சி இருந்தது.... அது வரை தனியே வசித்து வந்த நாங்கள் அவர் அம்மாவின் வீட்டு மாடியில் சிறிய அளவில் ஒரு கூரை வீடு கட்டி அதில் குடி வந்தோம்...மாடியில் தனியே வசித்தாலும் அவர்கள் அனைவருடனும் கூட்டு குடித்தனம் போலவே நாங்கள் மகிழ்வுடன் வாழ ஆரம்பித்தோம்...தொடரும்
 — remembering someone very special with Saidai Damu.

2 கருத்துகள்:

  1. இது நல்ல ஐடியா . மாடி வீட்டில் தனி வீடு , பிரைவேசிக்கு பிரைவேசி , பாதுகாப்புக்கு பாதுகாப்பு

    பதிலளிநீக்கு
  2. அப்போ எல்லாம் வீட்ல ஒரு ரூம் தானே இருக்கும் அங்கே அவர் அண்ணா குடும்பம் இருந்தது அதனால் மாடியில் தனி ரூம் கட்டி வந்தோம்

    பதிலளிநீக்கு