செவ்வாய், 16 மார்ச், 2010

பொய் சுவடுகள்

உன் வாசல் கதவை
தாண்டும் போது மட்டும்
பூமி அதிர நடப்பாள்
அவள் கொலுசொலி
நீ கேட்க ....
அதுவரை புன்னகை
மட்டும் பூக்கும் அவள் இதழ்கள்
உன் வாசல் தாண்டும் போது
சத்தமாக சிரிக்கும் ....
காணாதவரை கண்டது போல்
நிறுத்தி வைத்து உன் வாசலில்
கதைப்பாள் ....
சுவடுகளை பின்பற்றி
காதெல்ன்று நீ போய்
சொன்னால்
ஐயோ இல்லையென்று
தந்தை பின்னே ஓடுவாள்
பொய் சுவடுகளை நம்பாதே
பின் வேதனையில் வெம்பாதே ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக