உன் வாசல் கதவை 
தாண்டும் போது மட்டும் 
பூமி அதிர நடப்பாள் 
அவள் கொலுசொலி 
நீ கேட்க ....
அதுவரை புன்னகை 
மட்டும் பூக்கும் அவள் இதழ்கள் 
உன் வாசல் தாண்டும் போது 
சத்தமாக சிரிக்கும் ....
காணாதவரை கண்டது போல் 
நிறுத்தி வைத்து உன் வாசலில் 
கதைப்பாள் ....
சுவடுகளை பின்பற்றி 
காதெல்ன்று நீ போய்
சொன்னால் 
ஐயோ இல்லையென்று 
தந்தை பின்னே ஓடுவாள் 
பொய் சுவடுகளை நம்பாதே 
பின் வேதனையில் வெம்பாதே ........
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக