புதன், 10 மார்ச், 2010

நிழல் ..

நெடுந்தூர என் பயணத்தில்
அனலின் வெப்பத்தில்
நான் தகித்த போது
என் மேல் படர்ந்த
உன் நிழலின்
சுகத்தில் மயங்கி நின்றேன்
நிமிடத்தில் மறைந்ததும்
தான் புரிந்தது
நீ என்னை தொடரும்
நிலவின் நிழல் அல்ல
நிமிடத்தில் தாண்டும்
மேம்பால நிழல் என்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக