புதன், 3 மார்ச், 2010

துக்கம்

தாய்மாமன் இறந்தாராம்
சேதி வந்து சேர்ந்தது
பிள்ளையை குளிக்க வைக்கணும்
மாமனுக்கு சோறு கொண்டு போகணும்
அத்தைக்கு கூழு கரைக்கனும்
வீட்டை கூட்டி பெருக்கணும்
மாட்டுக்கு தண்ணி காட்டனும்
அத்தனையும் முடிச்சுட்டு
நானும் போய் சேர்ந்தேன்
நான் படும் துன்பங்களும்
சேர்த்து வச்ச துக்கங்களும்
கரையும் வரை அழுதேன்
வீடு போய் சேர்ந்ததும்
வேற வேலை பர்க்கணுமுல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக